கோவையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட 2,383 விளம்பர பலகைகள் அகற்றம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் உயர்நீதிமன்ற ஆணைப்படி மாவட்ட ஆட்சித் தலைவர் ஹரிஹரன், மாநகராட்சி ஆணையர் கே.விஜயகார்த்திகேயன்  ஆகியோர் ஒருங்கிணைந்து அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பலகைகள் உடனடியாக அகற்றுவதற்காக நடவடிக்கை மேற்கொள்ள உத்திரவிட்டு அதன்படி அக்டோபர்-2016 முதல் இதுவரை அனுமதியின்றி வைக்கப்பட்ட 2,383 விளம்பர பலகைகள் அகற்றப்பட்டுள்ளன. குறிப்பாக ராஜா தெரு, கருப்பை கவுண்டர் தெரு, என்.எஸ்.ஆர். ரோடு, விளாங்குறிச்சி ரோடு, அவினாசி ரோடு, அவினாசி ரோடு முதல் நவ்இன்டியா சாலை இணைப்பு வரை அனுமதியின்றி வைக்கப்பட்ட மொத்தம் 35 விளம்பர பலகைகள் அகற்றப்பட்டுள்ளது.

மேலும், பொது மக்களுக்கு இடையூறாக மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள விளம்பர பலகைகள் அகற்ற மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர் மூலம் அனைத்தும் பகுதிகளிலும் கண்காணிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் அனுமதியின்றி பேருந்து நிலையம், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், பிரதான சாலைகள்  ஆகியவற்றிலும் கண்டறிந்து விளம்பர பலகைகள் உடனடியாக அகற்றப்படுவதுடன் தொடர்புடைய நபர்கள் மீது கடும்நடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

மூலப்பொருள் விலை உயர்வால் 'ஜாப் ஒர்க்' நிறுவனங்கள் இயந்திர கட்டணம் உயர்த்த 'டாக்ட்', 'காட்மா' தொழில் அமைப்பினர் முடிவு

கோவையில் மூலப்பொருட்கள் விலை உயர்வால் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், Job Work நிறுவனங்கள் CNC,...

வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஆசையில் சிக்கும் இளைஞர்கள்: கோவை போலீசார் எச்சரிக்கை

கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கம்போடியாவில் சைபர் மோசடி கும்பலிடம் சிக்கி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, தென்கிழக்கு ஆச...

கிணத்துக்கடவு தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் வேட்பு மனு தாக்கல்

கிணத்துக்கடவு தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னாள் எம்.எல்.ஏ எட்டிமடை சண்முக...

கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் PRG அருண்குமார் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் PRG அருண்குமார் இன...

ஆனைமலையில் வால்பாறை தொகுதிக்கான தேர்தல் வியூக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

ஆனைமலையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வால்பாறை சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மதச்சார்பற்ற முற்...

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...