கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயணித்தனர். 48 டன் சரக்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றத்திலும் சேவைகள் தொடர்ந்தன என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

Coimbatore: ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் நிலவிய நிலையிலும், கோவை விமான நிலையத்திலிருந்து ஷார்ஜாவுக்கு மார்ச் மாதத்தில் வழங்கப்பட்ட விமான சேவைகளில் 4,880 பயணிகள் பயணம் செய்துள்ளதாகவும், 48 டன் எடை கொண்ட சரக்குகள் கையாளப்பட்டுள்ளதாகவும் விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக கோவையில் இருந்து ஷார்ஜா மற்றும் சிங்கப்பூருக்கு வழங்கப்பட்டு வந்த விமான சேவைகள் மார்ச் 1-ம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டன. கோவையிலிருந்து அபுதாபிக்கு ரத்து செய்யப்பட்ட சேவைகள் தற்போது வரை மீண்டும் தொடங்கப்படவில்லை.
இந்நிலையில், மார்ச் 9-ம் தேதி ஒரு நாள் கோவை-ஷார்ஜா இடையே ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவை வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மார்ச் 12-ம் தேதி முதல் மார்ச் 31-ம் தேதி வரை வாரந்தோறும் வியாழக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை தொடர்ந்து விமான சேவைகள் வழங்கப்பட்டன.
போர் பதற்றம் நிலவி வரும் சூழலிலும் மார்ச் மாதத்தில் 16 நாட்கள் இயக்கப்பட்ட விமானங்களில் மொத்தம் 4,880 பேர் பயணித்துள்ளனர். 48 டன் எடை கொண்ட சரக்குகள் கையாளப்பட்டுள்ளன.
ஒவ்வொரு முறை விமானம் இயக்கப்படும்போதும் 160 பயணிகள் கோவை வந்து சேர்ந்தனர். அதேபோல் 140 பயணிகள் கோவையிலிருந்து ஷார்ஜா புறப்பட்டுச் சென்றனர். மேலும், ஒவ்வொரு முறை விமானம் இயக்கப்பட்டபோதும் 3 டன் எடை கொண்ட சரக்குகள் விமானங்களில் கொண்டு செல்லப்பட்டன.
ஏப்ரல் மாதத்திலும் கோவை-ஷார்ஜா இடையே விமான சேவைகள் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தபோதிலும், ஈரான்-இஸ்ரேல் போர் சூழல் மோசமடைந்தால் திடீரென சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட வாய்ப்புகள் உள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
கோவை சர்வதேச விமான நிலையம் மேற்கு தமிழகம் மற்றும் கேரளாவின் சில பகுதிகளுக்கு முக்கிய வான் போக்குவரத்து மையமாக செயல்பட்டு வருகிறது. வளைகுடா நாடுகளுக்கான விமான இணைப்புகள் இப்பகுதியில் வசிக்கும் வெளிநாடு வேலைக்கு செல்பவர்களுக்கு மிக முக்கியமானதாக உள்ளது.

Newsletter

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...