கோவை மாவட்டத்தில் தீண்டாமை கடைபிடிப்பவர்கள் மீது நடவடிக்கை கோரி சமூக நீதிக் கட்சி ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்ட சமூக நீதிக் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

கோவை மாவட்டத்தில் கிணத்துக்கடவு, சூலூர், சுல்தான் பேட்டை, செஞ்சேரி மலை, அன்னூர், கீரணத்தம், கல்லிப்பட்டி, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக இரட்டைக் குவளை, சலூன்களில் முடிவெட்ட மறுப்பது, தனி சுடுகாடு உள்ளிட்ட பல்வேறு தீண்டாமைகள் நிலவிவருகிறது. 

இதுகுறித்து கடந்த 10 வருடத்திற்கும் மேலாக புகார் அளித்தும் விசாரிக்க வரும் அதிகாரிகள் கையூட்டுப்பெற்றுவிட்டு நடவடிக்கை எடுக்காமல் சென்றுவிடுகின்றனர். எனவே மாவட்ட ஆட்சியர் இப்பிரச்சனையில் தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும்.

மேலும், கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஆதிதிராவிட மாணவ, மாணவியர் விடுதிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை கூடுதலாக காட்டி விடுதி காப்பாளர்கள் சமையல் உள்ளிட்ட செலவுகளில் அரசிடம் கூடுதல் பணம் பெறுகின்றனர். பல விடுதிகளில் காப்பாளர்கள் விடுதிக்கு வருவதே இல்லை. 4 மாணவர்கள் மட்டுமே விடுதியில் உள்ள நிலையில் 60 மாணவர்கள் என கணக்கு காட்டி ஆயிரக் கணக்கில் ஒரு விடுதில் கொள்ளையடிக்கப்படுகிறது.



இதுகுறித்தும் மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என சமூக நீதிக் கட்சியின் கோவை மாவட்ட தலைவர் ந.பன்னீர் செல்வம் அளித்துள்ள மனுவில் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...