நிதி அமைச்சகம் முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளாததே நாட்டில் பிரச்சனைகளுக்கு காரணம் என பா.ஜ.க வின் மூத்த தலைவர் சுப்பிரமணியசுவாமி தகவல்


நிதி அமைச்சகம் முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளாததே நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பண பிரச்சனைகளுக்கு காரணம் என பா.ஜ.க வின் மூத்த தலைவர் சுப்பிரமணியசுவாமி கோவையில் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க வின் மூத்த தலைவர் சுப்பிரமணியசுவாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளர்  யார் என்பது குறித்து அந்த கட்சியின்பொதுக்குழுதான் முடிவு செய்யவேண்டும் எனவும் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறுபவர்கள் அதற்கான ஆதாரங்களை ஒப்படைக்க வேண்டும் எனவும் கூறினார்.

மேலும், தற்போது நாட்டில் நிலவிவரும் பணப்பிரச்சனைக்கு நிதி அமைச்சகம் எந்தவித முன்னேற்பாடுகளும் இல்லாமல் இதை அணுகியதுதான் காரணம் எனவும், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் வழக்கத்துக்கு மாறாக சிறியதாக இருப்பதால் அவற்றை ஏடிஎம் மையங்கள் மூலம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் சுப்பிபிரமணியசுவாமி அப்போது தெரிவித்தார்.

மேலும், தன்னுடைய தலைமையில் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற விவகாரம் தொடர்பான கூட்டம் நடந்த போது தான் 4 விதமான ஆலோசனைகளை மத்திய அரசுக்கு வழங்கியதாகவும், அவை கடைபிடிக்கபடவில்லை என குற்றம்சாட்டிய அவர் இந்த திட்டம் அறிவிக்கப்படும் முன்னரே இதுகுறித்து வெளியில் கசிய விட்டவர்கள் மீது வழக்குப்பதியக் கோரி மூன்று முறை மத்திய அரசிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அப்பொது அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...