கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்கப்படாததால் சுகாதார சீர்கேடு நிலவுவதாக பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.


Coimbatore: கோவை: கோவை சர்வதேச விமான நிலைய வளாகத்தில் நுழைவாயில் அருகே அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிட வளாகம் முறையாக பராமரிக்கப்படவில்லை என பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் உள்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், இரண்டு வெளிநாடுகளுக்கும் தினமும் சராசரியாக 31 முதல் 32 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் விமான நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். மேலும், பயணிகளை வழியனுப்பவும், வரவேற்று அழைத்து செல்லவும் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் விமான நிலையத்துக்கு வந்து செல்கின்றனர்.

இத்தகைய சூழலில், விமான நிலைய நுழைவாயில் அருகே அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் முறையாக பராமரிக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இயந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ள விளக்குகள் செயல்படாததால், அது பயன்பாட்டில் உள்ளதா என்பதில் குழப்பம் நிலவுவதாக பயணிகள் தெரிவித்துள்ளனர். மேலும், சுடுநீர் மற்றும் குளிர்ந்த நீர் வசதியுடன் கூடிய நவீன குடிநீர் இயந்திரங்கள் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதேபோல், நுழைவாயில் அருகே செயல்பட்டு வரும் கழிப்பிடங்களும் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. தினமும் நூற்றுக்கணக்கானோர் பயன்படுத்தும் நிலையில், மொத்தம் மூன்று கழிவறைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒரு கழிவறை மட்டுமே உள்ளதாகவும், சிறுநீர் கழிப்பதற்காக இரண்டு பேசின்கள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளதாகவும் பயணிகள் தெரிவித்துள்ளனர்.

பயணிகள் மட்டுமின்றி டாக்ஸி ஓட்டுநர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் இந்த கழிப்பிடங்களை பயன்படுத்தி வரும் நிலையில், உரிய பராமரிப்பு இல்லாததால் கடும் துர்நாற்றம் வீசுவதாகவும், சுகாதார சீர்கேடு காரணமாக நோய் தொற்று அபாயம் ஏற்படும் சூழல் நிலவுவதாகவும் அச்சம் தெரிவித்துள்ளனர்.

மேலும், விமான நிலையத்துடன் தொடர்பில்லாத பலரும் வெளிப்புற பகுதிகளில் இருந்து அருகிலுள்ள கேட் வழியாக வந்து கழிப்பிடத்தை பயன்படுத்துவதால், சுகாதார பிரச்சினை மேலும் மோசமடைந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் கோவை விமான நிலையத்தில் அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதார பராமரிப்பில் காணப்படும் குறைபாடுகள் பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், விமான நிலைய நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் K ரங்கநாயகி ராமச்சந்தி...

காய்ச்சல் பாதிப்பை தடுக்க கோவை மாநகராட்சி புதிய நடவடிக்கை: 24 மணி நேர மையம் தொடக்கம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 24 மணி நேர காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது. காய்ச்ச...

Facing Civic Issues in Your Ward? Submit Your Petition at Mayor’s Grievance Meet Tomorrow

Residents are invited to take part in the Corporation’s weekly Grievance Meeting and submit petitions regarding roads, s...

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...