ஆதரவற்றோர் பசியை தீர்க்கும் கோவை உணவு வங்கியின் வெற்றிகரமான 100-வது நாளில் 10 ஆயிரம் பேருக்கு உணவு பரிமாற்றம்


கோவை மாவட்டத்தில் பல ஆதரவற்றோர் இல்லங்களிலும், சாலையோரங்களிலும் ஏராளமான மக்கள் அன்றாடம் உணவின்றி தவித்து வருகின்றனர். அவர்களுக்கு உதவிடும் வகையில் கோவை உணவு வங்கி (Food Bank Coimbatore) என்னும் தன்னார்வ அமைப்பினர் உணவு தயாரித்து பரிமாறிவருகின்றனர்.



இவ்வமைப்பு துவங்கப்பட்டு தற்போது 100-வது நாளாக ஆதரவற்றோர்களுக்கு உணவு பரிமாறுவதை முன்னிட்டு கோவை உணவு வங்கியின் சார்பில் இன்று கோவை வஊசி மைதானத்தில் உணவு தயாரிக்கும் பணி நடைபெற்றது.

இதுகுறித்து கோவை உணவு வங்கியின் நிறுவனர் வைஸ்னவி நமது நிருபரிடம் கூறியதாவது:-



இவ்வமைப்பு துவங்கப்பட்டு வெற்றிகரமாக இன்றுடன் 100-வது நாளை அடைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நேற்று (சனி) மதியம் 3 மணியவில் இருந்து காய்கறிகளை வெட்டது துவங்கினோம். இன்று காலை 4 மணியவில் உணவு தயாரிக்கும் பணி நடைபெற்றது. நாங்கள் காய் பிரியாணி, தயிர்-வெங்காயம் மற்றும் இனிப்பு தயாரித்துள்ளோம். எங்களுடன் இணைந்து பலரும் இதில் இணைந்து பணியாற்றியுள்ளனர்.



இன்று சுமார் 10 ஆயிரம் பேருக்கான உணவு தயாரிக்கப்பட்டுள்ளது. இது கோவையில் 65 பகுதிகளில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்திற்கும், சாலையோர மக்களுக்கும் பரிமாறப்பட உள்ளது. எஸ்என்எஸ் ராஜலட்சுமி கல்லூரியில் இருந்து சபிதா மற்றும் அருண் ஆகிய ஆசிரியர்களும் மாணவர்களும் தற்போது எங்களுடன் இணைந்து இந்தச் சேவையில் ஈடுபட்டுள்ளனர்'' என்றார்.



இதுகுறித்து எஸ்என்எஸ் ராஜலட்சுமி கல்லூரி ஆசிரியயை சபிதா நம்மிடம் கூறுகையில், 

கோவை உணவு வங்கியின் இந்த சேவை பாராட்டுக்குறியது. தற்போது நாங்களும் இதில் இணைந்து பணியாற்றியுள்ளோம். எங்களுடன் 10-க்கும் மேற்பட்ட மாணவர்களும் இதில் இணைந்துள்ளனர். மாணவர்கள் சமைக்க உதவியும், அதனை பரிமாறுவதற்கும் முன்வந்துள்ளனர். 



ஆதரவற்றோர்களுக்கு என பல தன்னார்வ அமைப்பினர் செயல்பட்டு வந்தாலும் கோவை உணவு வங்கி அமைப்பினர் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி இப்பணியில் ஈடுபட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. எங்களது கல்லூரியில் உள்ள மற்ற ஆசியிர்களிடம் இதுகுறித்து கூறி இவ்வமைப்பில் இணைந்து பணியாற்ற செய்வோம்'' என்றார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் டெக் கார்டு லேப்ஸ் அறக்கட்டளை துவக்க விழா

Sri Ramakrishna Engineering College SREC Spark வளாகத்தில் Tech Card Labs Foundation துவக்க விழா நடைபெற்றது. இந்தியா-இஸ்ர...

கோவையில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர்

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran ஆகியோர் மாநகராட்சி...

கோவை போத்தனூரில் கட்டுமான தளத்தில் பணியாற்றிய இளைஞர் திடீர் மரணம்

கோவை போத்தனூர் கிரீன் பார்க் பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த வெள்ளலூரை சேர்ந்த 29 வயது இளைஞர் சந்தோஷ் திடீரென ம...

போதைப் பொருட்கள் தடுப்புப் படை: கோவையில் சிறப்புப் படையினர் தயார் நிலையில்!

கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர், முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த போதைப் பொருட்கள் தடுப்புப் படை மற்றும் சிங்கப் ப...

கோவை மாநகராட்சி: குடிநீர் குறைகளை மண்டல வாரிய எண்களில் தெரிவிக்கலாம்

கோவை மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran, குடிநீர் விநியோகம் தொடர்பான குறைகளை மண்டல வாரியாக தெரிவிக்க பொதுமக்களுக்க...

கோவையில் ரூ.9.90 கோடியில் பாரா ஒலிம்பிக் உள் விளையாட்டு வளாகம் அமைக்கப்படுகிறது

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ஜீவா நகர் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலகத்தரம் வாய்ந்த பா...