மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு கோவையில் திருநங்கைகள் மெளன அஞ்சலி ஊர்வலம்


தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 5-ம் தேதியன்று இரவு 11.30 மணியளவில் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அவருக்காக கண்ணீர் அஞ்சலி, மெளன அஞ்சலி ஊர்வலம், மொட்டை அடித்தல் உள்ளிட்டவைகள் அதிமுக கட்சியினர் மட்டுமின்றி பொதுமக்களும் செலுத்தி வருகின்றனர். 



இதன் ஒரு பகுதியாக கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் திருநங்கைகள் சார்பாக ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மாலை அனுவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து இதில் பங்கேற்ற 50-க்கும் மேற்பட்ட அவர்கள் கவுண்டம்பாளையத்திலிருந்து டி.வி.எஸ் நகர் வரை மெளன ஊர்வலமாக சென்றனர். 



இதுகுறித்து கோவை மாவட்ட திருநங்கைகள் சங்க செயலாளர் பூங்குழலி கூறும்போது, கோவை மாவட்டத்தில் 480-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் உள்ளனர். முதலமைச்சர் ஜெயலலிதா எங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், பசுமை வீடுகள், ஆதார் கார்டுகள் கிடைக்க ஏற்பாடு செய்துள்ளார். மேலும், ரேசன் கார்டுகள் குடும்பங்களுக்கு தான் வழங்கப்படும். நாங்கள் எங்கள் குடும்பத்துடன் இல்லை. ஆனால், ஜெயலலிதா ரேசன் கார்டுகள் 1 வாரத்தில் எங்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்துள்ளார். 



எங்களுக்கு வேலைகளும் தற்போது கிடைக்கிறது. எங்களாலும் இந்த சமூகத்தில் நிம்மதியாக வாழ முடியும் என்பது ஜெயலலிதாவின் ஆட்சியில்  தான். அவர்கள் இறந்த செய்தியை கேட்டு எங்களால் 2 நாட்களாக தூங்க முடியவில்லை, உணவு உண்ணவில்லை , இனிமேல் இவரை போல தலைவர் வருவாரா என்பது சந்தேகமே என்று கூறினார்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...