ஜெயலலிதா மரணத்தை அறிந்து அன்னூரில் தீக்குளித்த விவசாயி மரணம்!


தமிழக முதல்வர் கடந்த 5ம் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதை தொடர்ந்த் தமிழகதில் உள்ள அ.இ.அ.தி.மு.க.  தொண்டர்கள் கண்ணீர்விட்டு அஞ்சலி செலுத்தியும் மொட்டை அடித்தும், மெழுவர்த்தி ஏந்தி ஊர்வலம் சென்றும் தங்கள் இரங்கலை தெரிவித்தனர் . 

இந்த நிலையில்,  கோவை மாவட்டம் அன்னூர் தாலுக்காவிற்குட்பட்ட ஆத்திகுட்டை பகுதியைச்சேர்ந்த அதிமுக வின் தீவிர விசுவாசியான விவசாயி ராமச்சந்திரன். ஜெயலலிதா இறந்த செய்தியை அறிந்து வீட்டின் வெளிப்புறத்தை பூட்டிவிட்டு சமையல் அறையில் இருந்த இரண்டு லிட்டர் மண்ணெண்ணெயை எடுத்துக் கொண்டு  ஊருக்குள் வந்து தனது உடலில் ஊற்றி , தீ பற்ற வைத்துக்கொண்டார். 

இதைபார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து தண்ணீரை எடுத்து  ராமச்சந்திரன் மீது ஊற்றி அவரை காப்பாற்றினர். இதை தொடர்ந்து அவரது குடும்பத்திற்கு தகவல் சொல்லப்பட்டது உடலில் 80 சதவீதத்திற்கு மேல் தீக்காயமடைந்த அவரை 108 அவசர ஊர்தி மூலம் அன்னூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மேற்சிகிச்சைக்காக கோவை அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ராமச்சந்திரன் இன்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார். 

யாருமே வரவில்லை!

ஜெயலலிதா-வின் மரணச்செய்தியை ஏற்றுக் கொள்ள முடியாமல் தற்கொலைக்கு முயன்ற ராமச்சந்திரனை பார்க்க அக்கட்சியை சேர்ந்த ஒருவர் கூட வரவில்லை என்பது, ராமச்சந்திரனின் குடும்பத்தாருக்கு சொல்லிலடங்கா சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...