பார்வையற்றவர்கள் சார்பில் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி




கோவையில் பார்வையற்றவர்கள் சார்பில் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் ஜெயலலிதாவின் கனவுகள் நிறைவேற உறுதுணையாக இருப்போம் என உறுதிமொழியேற்றனர்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்புகள் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றுவருகிறது, இதன் ஒரு பகுதியாக கோவையில் பார்வையற்ற மாற்றுதிறனாளிகள் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினர், வரதராஜபுரம் பகுதியிலுள்ள பார்வையற்றோர் தேசிய இணைய அலுவலகத்தில் நடந்தநிகழ்ச்சியில் 25 க்கும் மேற்ப்பட்ட பார்வையற்றவர்கள் கலந்து கொண்டனர், அப்போது அவர்கள் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு  மெழுகுவர்த்தி ஏற்றியும் மலர்களை தூவியும் அஞ்சலி செலுத்தினர், முன்னதாக நடந்த உறுதிமொழியேற்ப்பு நிகழ்வில் கலந்துகொண்ட அவர்கள் ஜெயலலிதாவின் கனவான அமைதி, வளம், வளர்ச்சி ஆகியவற்றை நிலை நாட்ட மாற்றுதிறனாளிகள் சார்பில் உறுதுனையாக இருப்போம் என உறுதி மொழியேற்றனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...