ஓ எல் எக்ஸ்-யில் கார் விற்பனைக்கு என கூறி மோசடியில் ஈடுபட்ட 7 பேர் கைது



கோவை மாவட்டம், நஞ்சுண்டாபுரம் சாலை ஸ்ரீபதி நகரைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி அருண்பாபு (60). கடந்த மாதம் 27ம் தேதியன்று (OLX) ஓஎல்எக்ஸ்-யில் கார் ஒன்றின் விற்பனைக்கான விளம்பரத்தினை பார்த்துள்ளார். அதன் விலை 4.5 லட்சமாகும் . 

இதைத்தொடர்ந்து அந்த கார் விளம்பரத்தினை பதிவிட்டவர்களுக்கு தொலைபேசியில் அழைத்து விசாரிக்கையில் அவர்கள் முன்தொகையாக 5 ஆயிரம் ரூபாயினை வங்கிக் கணக்கில் செலுத்துமாறு கூறியுள்ளனர். அருண்பாபுவும் அந்த தொகையினை செலுத்தியுள்ளார்.

பின், அந்த நபர்களிடம் இருந்து எவ்வித தகவலும் அருண்பாபுவிற்கு வரவில்லை . தொடர்ந்து அந்த தொலைபேசி எண்ணும் அனைத்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அருண்பாபு இதுகுறித்து கோவை மாவட்ட சைபர் கிரைமில் கடந்த 31ம் தேதியன்று புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து சைபர் கிரைம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில் பொள்ளாச்சியை சேர்ந்த நரேஷ் (22), செரிஃப் (22), அபுதாகிர் (22), முஸ்தப்பா (21), முசாதிக் (21), சம்ருதின் (19) மற்றும் மதினா பேகம் (29) ஆகிய 7 பேர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. 

இதையடுத்து, அந்த 7 பேரையும் கைது செய்த காவல் துறையினர் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் இதுபோன்று போலியான விளம்பரங்கள் கொடுத்து பலரிடம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து அவர்களிடம் இருந்த ஒரு கார் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். 

இந்த 7 பேரின் புகைப்படங்களும் இன்று மாலை 5 மணியளவில் வெளியிடவுள்ளதாக சைபர் கிரைம் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...