தமிழக முதல்வரின் மறைவையொட்டி கோவையில் கண்ணீர் அஞ்சலி!


தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவின் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவந்த நிலையில் நேற்று இரவு (டிச. 6) சுமார் 11.30 மணியளவில் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் வெளியிட்டது.



கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் வெருட்சோடியே காணப்படுகின்றது. பள்ளி, கல்லூரிகளுக்கும், பெரும்பாலான அலுவலகங்களிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டதால் போக்குவரத்து குறைவாகவே காணப்படுகிறது. சிறிய மள்ளிகைக் கடை முதல் பெரிய வணிக வளாகங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. இருப்பினும் அத்யாவசியத் தேவைகளான மருந்துக் கடை, பெட்ரோல் பங்குகள், ஆம்புலன்ஸ் ஆகியவை செயல்பட்டு வருகிறது.



இதைத்தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் சென்னை விரைந்தனர். மாவட்டங்களின் பல பகுதிகளிலும் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.



அதன் ஒரு பகுதியாக கோவை காந்திபுரம் பேருந்துநிலையத்தில் கோவை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டு உயிரிழந்த தமிழக முதல்வருக்கு மௌன அஞ்சலி செலுத்தினர்.



இந்நிலையில், காந்திபுர பேருந்து நிலையத்தில் பெண்கள் ஏராளமானோர் கூடி ஜெயலலிதாவின் உயிரிழப்பையொட்டி ஒப்பாரிவைத்து அஞ்சலி செலுத்திவந்த நிலையில் இரண்டு பெண்கள் மயங்கி விழுந்தனர். அவர்களை மீட்ட மற்ற அதிமுக-வினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.



Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...