பொள்ளாச்சி - போத்தனூர் அகல ரயில்வே பாதை பணிகள் குறித்து தென்னக ரயில்வேத் துறை பொது மேலாளர் ஆய்வு

பொள்ளாச்சி - போத்தனூர் அகல ரயில்வே பணிகள் குறித்து தென்னக ரயில்வே பொது மேலாளர் வசிஸ்ட்ட ஜோகிரி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பொள்ளாச்சி மற்றும் போத்தனூர் ரயில்வே பாதை அகல பாதையாக மாற்றும் பணி கடந்த 2010-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த பணிகள் சுமார் ரூ.600 கோடி மதிப்பில் தொடங்கப்பட்டது. இதில் பொள்ளாச்சி - திண்டுக்கல், பொள்ளாச்சி - பாலக்காடு இடையேயான அகல ரயில் பாதை பணிகள் முடிவடைந்து ரயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

மேலும், 2010-ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதி போதுமானதாக இல்லாததால் பொள்ளாச்சி- போத்தனூர் இடையேயான ரயில்வே பணிகள் மிகவும் மந்தமான நிலையில் நடைபெற்று வந்தது. இதைத் தொடர்ந்து கூடுதலாக ரூ.100 கோடியினை மத்திய அரசு ஒதுக்கியது. இதையடுத்து தற்போது பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. 



இந்நிலையில், பொள்ளாச்சி போத்தனூர் இடையேயான அகல ரயில் பாதையில் தென்னக ரயில்வே மேலாளர் வசிஸ்ட்ட ஜோகிரி நேரில் சென்று ஆய்வு செய்தார். பின் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ''பொள்ளாச்சி- போத்தனூர் இடையிலான ரயில்வேப் பாதைப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்துவிடும். ஜனவரி இறுதிக்குள் பணிகள் முடிவடைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என்றார்.



Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...