கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ காலமானார்



கியூபாவின் முன்னாள் அதிபரும், கம்யூனிஸ்ட்டின் முதுபெரும் புரட்சியாளருமான பிடல் காஸ்ட்ரோ தனது 90-வது வயதில் சனிக்கிழமையன்று (இன்று) உயிரிழந்தார்.

1962 ஆகஸ்ட் 13ம் தேதியன்று கியூபாவில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவர் பிடல் காஸ்ட்ரோ. பல்வேறு செல்வங்களை பெற்ற குடும்பத்தில் பிறந்திருந்தாலும், கியூபா மக்களின் அடிமை நிலையைக் கண்டு தனது வசதியான வாழ்க்கையை புறந்தள்ளி மக்களுக்காக அமெரிக்காவின் ஏகாதிபத்திய நாட்டை எதிர்த்து போராட துவங்கினார். 

கியூபாவில் நடைபெற்று வந்த அமெரிக்காவின் கைக்கோளான சர்வாதிகாரி புல்ஜென்சியோ பாட்டிட்ஸ்டாவின் ஆட்சிக்கு எதிராக போராடி அதிகாரத்தை கைப்பற்றினார் பிடல் காஸ்ட்ரோ. இதையடுத்து, தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்ற காஸ்ட்ரோ, 1959-ம் ஆண்டு முதல் 1976 வரை கியூபாவின் பிரதமராக பதவி வகித்தார். கடந்த 1976-ஆம் ஆண்டு அந்நாட்டு அதிபராக பொறுப்பேற்ற காஸ்ட்ரோ 2008 வரை அப்பதவியில் நாடுபோற்றும் சிறப்பான செயல்களில் ஈடுபட்டார். 

கியூபாவின் விடுதலை காலம் தொட்டு, கடந்த 50 வருடத்திற்கும் மேலாக அதிபராக பதவி வகித்த பிடல் காஸ்ட்ரோ கடந்த 2008-ம் ஆண்டு ஏற்பட்ட உடல் நலக் குறைவின் காரணமாக அதிபர் பதவியை தனது சகோதரர் ராவல் காஸ்ட்ரோவிடம் ஒப்படைத்தார்.

இருப்பினும், சோர்வடையாமல், தொடர்ந்து கியூபாவின் வளர்ச்சிக்காக திட்டமிடல் போன்ற செயல்களில் ஈடுபட்டு, மருத்துவம், பொருளாதாரம் உள்ளிட்டவற்றில் கியூபாவை தனிச் சிறப்புமிக்க நாடாக மாற்றியதில் பெரும்பங்கு வகித்தார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் பிடல் தனது 90-வது பிறந்த நாளை உற்சாகத்துடன் கொண்டாடினார். 

இந்நிலையில், சில தினங்களாக உடல் நலக் குறைவின் காரணமாக சிகிச்சை பெற்றுவந்த பிடல் காஸ்ட்ரோ இன்று (சனிக்கிழமை) உயிரிழந்தார்.

Newsletter

கிணத்துக்கடவு தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் வேட்பு மனு தாக்கல்

கிணத்துக்கடவு தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னாள் எம்.எல்.ஏ எட்டிமடை சண்முக...

கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் PRG அருண்குமார் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் PRG அருண்குமார் இன...

ஆனைமலையில் வால்பாறை தொகுதிக்கான தேர்தல் வியூக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

ஆனைமலையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வால்பாறை சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மதச்சார்பற்ற முற்...

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...

வேட்புமனு தாக்கல் செய்த 2 நாட்களில் 110 வழக்கு: தேர்தல் ஆணையத்திடம் K. Surya புகார்

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச்செயலாள...

கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவை

தென் ரயில்வே கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவையை அறிவித்துள்ளது. திருந...