கேழ்வரகின் விலை விவசாயிகளை மகிழ்விக்கும் என வேளாண் பல்கலைக்கழகம் தகவல்

கேழ்வரகு சிறுதானிய பயிர்களில் மிக முக்கியமான உணவுப் பொருளாகவும், மிகுந்த ஊட்டச்சத்து வாய்ந்ததாகவும், சேமித்து வைக்க ஏதுவானதாகவும் உள்ளது. இந்திய தேசிய வேளாண்மை அமைச்சகத்தின் நான்காம் முன் மதிப்பீட்டின் படி, 2015- 16 ஆம் ஆண்டில் கேழ்வரகு 1.20 மில்லியன் எக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டு 1.79 மில்லியன் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

கேழ்வரகு உற்பத்தியில் கர்நாடகா, தமிழ்நாடு, ஒடிசா, ஆந்திர பிரதேசம், உத்திரகாண்ட், மகாராஷ்டிரா, உத்திர பிரதேசம் மற்றும் இமாச்சல் பிரதேசத்தின் மலைப்பாங்கான பகுதிகள் பெரும் பங்கு வகிக்கிறது.

தமிழ்நாட்டில் பொருளாதாரம் மற்றும் புள்ளியல் இயக்குனரகம் மதிப்பீட்டின்படி 2014- 15 ஆம் ஆண்டு கேழ்வரகு 0.11 மில்லியன் எக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டு 0.25 மில்லியன் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், வேலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலிருந்து மாநிலத்தின் மொத்த கேழ்வரகு உற்பத்தியில் 87 சதவிகிதம் உற்பத்தி செய்யப்படுகிறது.

டிசம்பர் மாத இறுதியில் கேழ்வரகின் சந்தை வரத்து ஆரம்பமாகிறது. இதனை தொடர்ந்து, வருடம் முழுவதும் சேமித்து வைத்து பயன்படுத்தப்படுகிறது. சாதகமற்ற பருவ மழையின் காரணமாக கேழ்வரகின் உற்பத்தி தமிழகத்தில் குறைந்துள்ளது. எனவே, கேழ்வரகிற்கு தேவை அதிகமாக இருப்பதால் வரும் மாதங்களில் நல்ல விலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இச்சூழலில் விவசாயிகள் விற்பனை முடிவுகளை எடுக்க ஏதுவாக கடந்த 10 ஆண்டுகளாக திண்டிவனம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலவிய கேழ்வரகு விலையை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில், ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தின் கீழ் இயங்கி வரும் விலை முன்னறிவிப்பு திட்டம், ஆய்வு செய்து சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது. ஆய்வு முடிவின் அடிப்படையில் தரமான கேழ்வரகின் பண்ணை விலையானது கிலோவிற்கு ரூ.20 முதல் 22 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே விவசாயிகள் மேற்கூறிய சந்தை ஆலோசனைகளின் படி விதைப்பு முடிவுகளை எடுத்தால் அதிக பயன்பெறலாம்.

இதுகுறித்தான மேலும் விவரங்களுக்கு உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை - 641 003 என்ற முகரிக்கோ, அல்லது, 0422- 2431405 என்ற தொலைபேசி எண்ணிற்கோ தொடர்பு கொண்டு தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.

Newsletter

கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி, சனிக்கிழமை கோட்டாட்சியர் வ...

கோவை வடக்கில் போட்டியிடும் வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி பதிவு

பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த கட்சித் தலைவர்களுக்கு நன்ற...

100 சதவீத வாக்குப்பதிவுக்காக கோவையில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு வாகன பேரணி

கோவையில் சட்டமன்றத் தேர்தலுக்கான 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு வாகன பேரணி மேற்கொண...

கோவையில் ஓய்வு பெற்ற தாசில்தாரிடம் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸ் என்ற பெயரில் ரூ.45.50 லட்சம் டிஜிட்டல் மோசடி

கோவை சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற தாசில்தார் குணசேகரன் (70) லக்னோ தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸ் என்று கூற...

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி: தவெக வேட்பாளர் கனிமொழி தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளர் கனிமொழி நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் கடைகள், பெட்ரோல் பங்குகளுக்...

கோவை கழிவுநீர் தொட்டியில் விழுந்த இரு ஒப்பந்த ஊழியர்களை மீட்க தீவிர முயற்சி

கோவை சாய்பாபா காலனியில் கழிவுநீர் உந்து நிலையத்தில் மோட்டார் பழுது பார்க்க இறங்கிய இரு மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் 40 அ...