100 சதவீத வாக்குப்பதிவுக்காக கோவையில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு வாகன பேரணி

கோவையில் சட்டமன்றத் தேர்தலுக்கான 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு வாகன பேரணி மேற்கொண்டனர். மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar கொடியசைத்து பேரணியைத் தொடங்கி வைத்தார். 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று செம்மொழி பூங்கா வரை பேரணி சென்றது.


Coimbatore: தமிழக சட்டமன்றத் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கோவையில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு வாகன பேரணி மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar கொடியசைத்து இந்த பேரணியைத் தொடங்கி வைத்தார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக நடத்தி வருகிறது. தேர்தல் அறிவிப்பு வெளியானதும், ஏர் பலூனில் பறந்து மாவட்ட ஆட்சியர் வாக்குப்பதிவு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மேலும், தேர்தல் உறுதிமொழி ஏற்பு, கல்லூரி மாணவர்களின் ஓவியம் வரைதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கோவையில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு வாகன பேரணி இன்று மேற்கொள்ளப்பட்டது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து இந்த பேரணியை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த விழிப்புணர்வு வாகன பேரணியில் 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். 100 சதவீத வாக்குப்பதிவின் அவசியம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு அவர்கள் பேரணி சென்றனர்.

ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய இந்த பேரணி அவிநாசி சாலை, எல்லை அம்மன் கோவில், காந்திபுரம் வழியாக செம்மொழி பூங்கா வரை சென்று நிறைவு பெற்றது. பேரணியில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள் பொதுமக்களிடம் நூறு சதவீத வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

தேர்தல் என்பது ஜனநாயகத்தின் முதுகெலும்பு என்பதையும், ஒவ்வொரு வாக்கும் மதிப்புமிக்கது என்பதையும் எடுத்துரைத்து மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்த பேரணியில் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் பங்கேற்றனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...