100 சதவீத வாக்குப்பதிவுக்காக கோவையில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு வாகன பேரணி

கோவையில் சட்டமன்றத் தேர்தலுக்கான 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு வாகன பேரணி மேற்கொண்டனர். மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar கொடியசைத்து பேரணியைத் தொடங்கி வைத்தார். 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று செம்மொழி பூங்கா வரை பேரணி சென்றது.


Coimbatore: தமிழக சட்டமன்றத் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கோவையில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு வாகன பேரணி மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar கொடியசைத்து இந்த பேரணியைத் தொடங்கி வைத்தார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக நடத்தி வருகிறது. தேர்தல் அறிவிப்பு வெளியானதும், ஏர் பலூனில் பறந்து மாவட்ட ஆட்சியர் வாக்குப்பதிவு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மேலும், தேர்தல் உறுதிமொழி ஏற்பு, கல்லூரி மாணவர்களின் ஓவியம் வரைதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கோவையில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு வாகன பேரணி இன்று மேற்கொள்ளப்பட்டது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து இந்த பேரணியை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த விழிப்புணர்வு வாகன பேரணியில் 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். 100 சதவீத வாக்குப்பதிவின் அவசியம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு அவர்கள் பேரணி சென்றனர்.

ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய இந்த பேரணி அவிநாசி சாலை, எல்லை அம்மன் கோவில், காந்திபுரம் வழியாக செம்மொழி பூங்கா வரை சென்று நிறைவு பெற்றது. பேரணியில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள் பொதுமக்களிடம் நூறு சதவீத வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

தேர்தல் என்பது ஜனநாயகத்தின் முதுகெலும்பு என்பதையும், ஒவ்வொரு வாக்கும் மதிப்புமிக்கது என்பதையும் எடுத்துரைத்து மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்த பேரணியில் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் பங்கேற்றனர்.

Newsletter

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...

மேட்டுப்பாளையம் தொகுதி அதிருப்திக்குப் பிறகு ராஜினாமா: திமுக T R சண்முகசுந்தரம் தனியாக போட்டி?

குடும்ப சூழ்நிலை மற்றும் பணி சுமை காரணமாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் TR சண்முகச...

கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி, சனிக்கிழமை கோட்டாட்சியர் வ...

கோவை வடக்கில் போட்டியிடும் வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி பதிவு

பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த கட்சித் தலைவர்களுக்கு நன்ற...