கோவை இரயில் நிலையம் பகுதியில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி மற்றும் தன்னார்வலர்கள்


தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நவம்பர் 21-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை சுத்தம் செய்யும் பணி நடைபெற உள்ளது. இதற்காக, கோவை மாநகராட்சியின் சார்பில் தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தூய்மைப் பணியில் ஈடுபட அழைப்பு விடப்பட்டது.



அதன்படி, இன்று கோவை மாநகராட்சி, மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட இரயில் நிலையம் அருகில் கோவை மாநகாட்சியும், தூய்மை பாரத இயக்கமும் இணைந்து காலை 7 மணி முதல் 9 மணி வரை தூய்மைப் பணிகளில் ஈடுபட்டனர்.



ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா-வின் முன்பு 50-க்கும் மேற்பட்டோர் இணைந்து பேருந்து நிலையம், கடைகள், ஆட்டோ நிறுத்தம் ஆகிய பகுதிகளில் இருந்த குப்பைகளை அகற்றினர்.



இதையடுத்து, அப்பகுதியில் இருந்த சுவரொட்டிகள், விளம்பர பலகைகள் உள்ளிட்டவற்றை அகற்றி, அப்பகுதி கடைக்காரர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் ஆகியோரிடம் தூய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.



இப்பணிகளை கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 



உடன், மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...