சிங்காநல்லூர் குளக்கரையில் பனைமர நாற்றுப்பண்ணை மையம் திறப்பு

கோவை: சிங்காநல்லூர் பகுதியில் பனைமர நாற்றுப்பண்ணை மையம் இன்று கோவை மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் திறந்து வைத்தார்.



இம்மையம் குளக்கரையில் மரக்கன்றுகளை அமைப்பதற்காக மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டது. 18 ஜூன் 2016ம் ஆண்டு கோவை மாநகராட்சி சிங்காநல்லூர் குளத்தை மறுசீரமைக்கும் திட்டம் தொடங்கியது. இதனை கோவை மாநகராட்சி மேயர் கணபதி ராஜ்குமார் மற்றும் கோவை மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் துவங்கி வைத்தார். 



இத்திட்டத்தில், குளங்களை பாதுகாப்பதற்கும், குளத்தின் மண் அரிப்பை தடுத்து வளப்படுத்துவதற்கும் குளத்தை சுற்றி பனை மரங்களை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்கு பனை மரம் நாற்றுப்பண்ணை மையம் குளத்தின் அருகில் திறக்கப்பட்டது.



இதன் மூலம் குளத்தை சுற்றி மரக் கன்று நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக இன்று சிங்காநல்லூர் குளத்தில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான விஜயகார்த்திகேயன் மரக்கன்றை நட்டு வைத்தார். இதில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...