டிசம்பர் இறுதிக்குள் பண பிரச்சனை தீராவிட்டால் பிரதமருக்கு தூக்கு கயிறு அனுப்ப வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா முடிவு



கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா அமைப்பினர் டிசம்பர் இறுதிக்குள் தற்போது நிலவும் பண பிரச்சனை தீராவிட்டால் பிரதமர் மோடிக்கு தூக்குக் கயிறு அனுப்பும் போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்தனர்.

கோவை பிஎஸ்என்எல் தலைமை அலுவலகத்தை வெள்ளியன்று (இன்று) மாலை வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா அமைப்பினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது 500 ரூபாய், ஆயிரம் ரூபாய் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் பொது மக்கள் வங்கிகளிலும், ஏ.டி.எம் வாசல்களிலும் நீண்ட நேரம் நிற்க வேண்டி இருப்பதாக குற்றம்சாட்டினர்.

பெரு முதலாளிகளுக்கு கொடுக்கப்பட்ட 7 லட்சம் கோடி பணம் வாராக்கடனால் பாதிக்கப்பட்டுள்ள தேசிய வங்கிகளை காப்பாற்றவே மத்திய அரசு இந்த நடவடிக்கையினை எடுத்து இருப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர்.

தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சனைகள் அனைத்தும் டிசம்பர் இறுதிக்குள் சரியாகிவிடும் என பிரதமர் மோடி தெரிவித்து இருப்பதாகவும், பணப்பிரச்சனை டிசம்பர் இறுதிக்குள் தீரவில்லை என்றால் பிரதமர் மோடிக்கு தூக்குக் கயிற்றை அனுப்பும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா அமைப்பின் தமிழக பொதுச்செயலாளர் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் சமரசப் படுத்தியதைத் தொடர்ந்து முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் டெக் கார்டு லேப்ஸ் அறக்கட்டளை துவக்க விழா

Sri Ramakrishna Engineering College SREC Spark வளாகத்தில் Tech Card Labs Foundation துவக்க விழா நடைபெற்றது. இந்தியா-இஸ்ர...

கோவையில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர்

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran ஆகியோர் மாநகராட்சி...

கோவை போத்தனூரில் கட்டுமான தளத்தில் பணியாற்றிய இளைஞர் திடீர் மரணம்

கோவை போத்தனூர் கிரீன் பார்க் பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த வெள்ளலூரை சேர்ந்த 29 வயது இளைஞர் சந்தோஷ் திடீரென ம...

போதைப் பொருட்கள் தடுப்புப் படை: கோவையில் சிறப்புப் படையினர் தயார் நிலையில்!

கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர், முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த போதைப் பொருட்கள் தடுப்புப் படை மற்றும் சிங்கப் ப...

கோவை மாநகராட்சி: குடிநீர் குறைகளை மண்டல வாரிய எண்களில் தெரிவிக்கலாம்

கோவை மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran, குடிநீர் விநியோகம் தொடர்பான குறைகளை மண்டல வாரியாக தெரிவிக்க பொதுமக்களுக்க...

கோவையில் ரூ.9.90 கோடியில் பாரா ஒலிம்பிக் உள் விளையாட்டு வளாகம் அமைக்கப்படுகிறது

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ஜீவா நகர் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலகத்தரம் வாய்ந்த பா...