பாலித்தீன் பைகளை தவிர்த்து துணிப் பைகளை பயன்படுத்த மாநகராட்சி ஆணையர் ஆலோசனை



கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் தலைமையில் கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து ஹோட்டல் உரிமையாளர்களுடன் பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பைகளை பயன்படுத்துவதற்கு பதிலாக துணிகளால் ஆன பைகளை பயன்படுத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் வியாழனன்று (இன்று) நடைபெற்றது. 



இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவிக்கையில், ''கோவை மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பைகள் பெருகி வருவதால் சுற்றுசூழல் பாதிக்கப்பட்டு வருகிறது. இதை தடுத்திடும் வகையில் இன்று அனைத்து ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் சுகாதார அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பைகள் உபயோகத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும், பாலித்தீன் பைகள் எளிதில் மக்குவதில்லை, பாலித்தீன் பைகளால் பல்வேறு உடல்நிலைப் பிரச்சனைகளும் ஏற்படுகிறது. இதை தடுத்திடும் வகையில் அனைத்து ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதற்கு பதிலாக துணிகளால் ஆன பைகளை உபயோகிக்குமாறும், குறிப்பாக ஹோட்டல் உரிமையாளர்கள் தங்களின் வாடிக்கையாளர்கள், பார்சல் வாங்க வரும் பொழுது பாத்திரங்களோ அல்லது துணிகளால் ஆன பைகளை கொண்டுவருமாறும் பொது மக்கள் அறியும் வகையில் அறிவிப்புப்பலகை வைத்திடுமாறும், தவிர்க்க முடியாத பட்சத்தில் ஹோட்டல்கள் மற்றும் உணவக உரிமையாளர்கள் துணிகளால் ஆன பைகளையே வாடிக்கையாளர்களுக்கு வழங்கிடுமாறு அறிவுறுத்தப்பட்டது.

மேலும், பைகளில் 95 சதவிகிதம் பிளாஸ்டிக் கலந்திருப்பதால் மக்கும் தன்மை கிடையாது, ஆகையால் பொது மக்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் இதை பயன்படுத்த வேண்டாம் என க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், துணை ஆணையர் ப.காந்திமதி, நகர் நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், உதவி நகர்நல அலுவலர் எம்.சந்தோஷ்குமார், ஸ்ரீ அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர்கள் சீனிவாசன், விவேக் சீனிவாசன், நியூ ஆரிய பவன் ஹோட்டல் உரிமையாளர் பாலாஜி, சூரியா ஹோட்டல் உரிமையாளர் சுந்தர்ராஜன், சுப்பு மெஸ் உரிமையாளர் செந்தில்குமார், ஸ்ரீ ஆனந்தாஸ் ஹோட்டல் உரிமையாளர் வெங்கடேஷ், ஆர்.ஹெச்.ஆர் ஹோட்டல் உரிமையாளர் சிவக்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...