தமிழகத்தில் பறவைக் காய்ச்சலை தடுக்க தீவிர நடவடிக்கை- கால்நடை பராமரிப்புத் துறை தகவல்


தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் பரவுவதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும், கேரளாவில் பறவைக் காய்ச்சல் ஒழிக்கப்பட்டது என அறிவிக்கும் வரை தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் கமலேஷ் தனப்பன் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியில் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக கோவை மாவட்டத்தில் வாளையாறு, வேலாந்தாவளம், ஆனைகட்டி உள்ளிட்ட 12 பகுதிகளில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு கேரளாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களுக்கும் கிருமி நாசினி மருந்து தெளித்த பின்னரே, தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன.

மேலும், பறவைக் காய்ச்சல் பரவுவதை தடுக்க கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் தொடர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே கோவை வாளையாறு பகுதியில் உள்ள பறவைக் காய்ச்சல் தடுப்பு சோதனைச் சாவடியில் கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் கமலேஷ் தனப்பன் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

''பறவைக் காய்ச்சல் பரவுவதை தடுக்க கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள 6 மாவட்டங்களில் 26 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் பணியாற்றும் வகையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் பறவை காய்ச்சல் முழுமையாக ஒழிக்கப்பட்டுவிட்டது என அறிவிக்கும் வரை இப்பணிகள் தொடர்ந்து நடைபெறும். கேரளாவில் இருந்து வரும் வாத்து, கோழி, முட்டை உள்ளிட்ட பொருட்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகிறது. மேலும், பறவைக் காய்ச்சல் கிருமியினால் மனிதனுக்கு தொற்று நோய் ஏற்பட வாய்ப்பில்லை என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. கோழிப்பண்ணை, பறவைகள் சரணாலயம், உயிரியல் பூங்காக்களில் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், அங்கு அதிகப்படியான பறவைகள் இறப்புகள் இருந்தால் கால்நடை பராமரிப்புத் துறையினருக்கு உடனடியாக தெரியப்படுத்த வேண்டும். இறந்த பறவைகளை பரிசோதனைக்கு உட்படுத்தி நடவடிக்கை எடுக்கப்படும்'' என தெரிவித்தார்.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...