அமெரிக்க அதிபர் வேட்பாளர் டிரம்ப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் : மேடை முன் துப்பாக்கியுடன் மர்ம நபர் இருந்ததால் பரபரப்பு

பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதால் அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்பை பாதுகாவலர்கள் பாதுகாப்பாக கூட்டத்திலிருந்து வெளியேற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் டிரம்ப் ஈடுபட்டிருந்த போது, குடியரசுக் கட்சி வேட்பாளர் டிரம்ப் முன் மர்ம நபர் ஒருவர் கையில் துப்பாக்கியுடன் காணப்பட்டார். இதனை கவனித்த பாதுகாவலர்கள் அதிரடியாக செயல்பட்டு மர்ம நபரை தூக்கிச் சென்றனர். பாதுகாப்பை உறுதிப்படுத்த டிரம்பையும் மேடைக்கு பின்புறம் அழைத்து சென்றனர். 



இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மர்மநபர் வெளியேற்றப்பட்ட பிறகு பிரச்சார மேடைக்கு திரும்பிய டிரம்ப், எந்தவிதமான மிரட்டலுக்கும் தாம் அடிபணிய போவதில்லை என்றார். தமது பயணம் திட்டமிட்டப்படி தொடரும் என்றார். மேலும் பேசிய அவர் எங்களுக்கு வெற்றி எளிதாக கிடைத்துவிடும் என யாரும் கூற முடியாது என்றார். எனது பயணத்தை யாராலும் தடுக்க முடியாது என்றார். நாளை மறுநாள் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதுவரை வெளியான கருத்து கணிப்புகளில் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...