அமெரிக்க அதிபர் வேட்பாளர் டிரம்ப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் : மேடை முன் துப்பாக்கியுடன் மர்ம நபர் இருந்ததால் பரபரப்பு

பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதால் அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்பை பாதுகாவலர்கள் பாதுகாப்பாக கூட்டத்திலிருந்து வெளியேற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் டிரம்ப் ஈடுபட்டிருந்த போது, குடியரசுக் கட்சி வேட்பாளர் டிரம்ப் முன் மர்ம நபர் ஒருவர் கையில் துப்பாக்கியுடன் காணப்பட்டார். இதனை கவனித்த பாதுகாவலர்கள் அதிரடியாக செயல்பட்டு மர்ம நபரை தூக்கிச் சென்றனர். பாதுகாப்பை உறுதிப்படுத்த டிரம்பையும் மேடைக்கு பின்புறம் அழைத்து சென்றனர். 



இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மர்மநபர் வெளியேற்றப்பட்ட பிறகு பிரச்சார மேடைக்கு திரும்பிய டிரம்ப், எந்தவிதமான மிரட்டலுக்கும் தாம் அடிபணிய போவதில்லை என்றார். தமது பயணம் திட்டமிட்டப்படி தொடரும் என்றார். மேலும் பேசிய அவர் எங்களுக்கு வெற்றி எளிதாக கிடைத்துவிடும் என யாரும் கூற முடியாது என்றார். எனது பயணத்தை யாராலும் தடுக்க முடியாது என்றார். நாளை மறுநாள் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதுவரை வெளியான கருத்து கணிப்புகளில் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

Newsletter

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...

பொள்ளாச்சியில் அதிமுக தேர்தல் பரப்புரை: Jayaraman வாக்குச் சேகரிப்பு

பொள்ளாச்சி அண்ணா நகர் மற்றும் விஜயபுரம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் Jayaraman தலைமையில் அதிமுக கட்சியினர் தீவிர வாக்குச...

கோவை மருதமலை முருகன் கோவிலில் NDA வெற்றிக்காக சிறப்பு பூஜை

கோவை மருதமலை முருகன் கோவிலில் வரவிருக்கும் தேர்தலில் National Democratic Alliance அமோக வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நட...