தமிழக அரசு சட்டமன்ற நிலைக்குழுக்களை அமைப்பதில் தாமதம் காட்டுவது ஏன்? - ஜி.கே.வாசன்


தமிழக அரசு சட்டமன்ற நிலைக்குழுக்களை அமைப்பதில் தாமதம் காட்டுவது ஏன் என்று கேள்வியெழுப்பியுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதிகம் உள்ள காரணத்தால் தான் தாமதிக்கிறதா என விளக்கமளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு விமானம் மூலம் டெல்லி சென்றார். முன்னதாக, கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்,



''காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு மறுப்பு தெரிவிக்கிறது, கர்நாடக அரசும் தண்ணீர் திறந்துவிட தொடர்ந்து மறுத்து வருகிறது. இதனால், டெல்டா மாவட்ட விவசாயிகள் மூன்று பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தற்கொலைகளை தடுக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் மற்றும் மானாவரி நிலத்திற்கு சேத அடிப்படையில் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். தமிழக மீனவர் பிரச்சனைக்கு ஆக்கப்பூர்வமான முடிவு எட்டப்படாதது வருத்தமளிக்கிறது. கச்சத்தீவை கைப்பற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இதேப்போல், சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரள அரசின் திட்டத்திற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் நிரந்தர தடை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கேரள கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவதை தடுக்க உள்ளாட்சி அமைப்புகளை காவல்துறையினர் உதவியுடன் கண்காணிக்க வேண்டும். மேலும், பாதுகாப்பான முறையில் ஜல்லிக்கட்டு நடத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு தமிழக அமைச்சர்கள் பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும். தமிழக அரசு சட்டமன்ற நிலைக்குழுக்களை அமைப்பதில் தாமதம் காட்டுவது ஏன் ?. எதிர்க் கட்சி உறுப்பினர்கள் அதிகம் உள்ள காரணத்தால் தான் தாமதிக்கிறதா என விளக்கமளிக்க வேண்டும்'' என்றார்.

Newsletter

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...

பொள்ளாச்சியில் அதிமுக தேர்தல் பரப்புரை: Jayaraman வாக்குச் சேகரிப்பு

பொள்ளாச்சி அண்ணா நகர் மற்றும் விஜயபுரம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் Jayaraman தலைமையில் அதிமுக கட்சியினர் தீவிர வாக்குச...

கோவை மருதமலை முருகன் கோவிலில் NDA வெற்றிக்காக சிறப்பு பூஜை

கோவை மருதமலை முருகன் கோவிலில் வரவிருக்கும் தேர்தலில் National Democratic Alliance அமோக வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நட...