நீலகிரியில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு ஆட்சியர் திடீர் ஆய்வு


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விரையில் துவங்கவுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரித முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மழை நீர் வடிகால் அமைப்பு, குளங்கள், நீர்த்தேக்கம் உள்ளிட்டவை கனமழையின் காரணமாக வெள்ளம் பாதிக்காதவாறு துறை அதிகாரிகள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், வடிகால் துறை, சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்புத் துறை, கால்நடைத் துறை உள்ளிட்ட பிரிவுகளின் சார்பிலும் வடகிழக்கு பருவமழை அவசரக் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.



அதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் பொ.சங்கர், அம்மாவட்டத்திற்கு உட்பட்ட வெள்ளம் பாதிப்புகள் ஏற்படக் கூடிய சில பகுதிகளில் திடீர் ஆய்வில் ஈடுபட்டார். குன்னூர்க்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் பகுதியில் ஆய்வில் ஈடுபட்ட ஆட்சியர் அப்பகுதியில் இருந்த ஒரு பெட்டிக் கடை வியாபாரியிடம், அவரது வியாபாரம் குறித்து விசாரித்தார். 

இந்நிகழ்வின் போது, நீலகிரி மாவட்ட ஆட்சியர் பொ.சங்கருடன் குன்னூர் ஆர்.டி.ஓ கீதாபிரியா, தாசில்தார் ஜான் மனோகர், குன்னூர் வருவாய் ஆய்வாளர் வசந்த் மற்றும் பலர் இருந்தனர்.

Newsletter

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...

பொள்ளாச்சியில் அதிமுக தேர்தல் பரப்புரை: Jayaraman வாக்குச் சேகரிப்பு

பொள்ளாச்சி அண்ணா நகர் மற்றும் விஜயபுரம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் Jayaraman தலைமையில் அதிமுக கட்சியினர் தீவிர வாக்குச...

கோவை மருதமலை முருகன் கோவிலில் NDA வெற்றிக்காக சிறப்பு பூஜை

கோவை மருதமலை முருகன் கோவிலில் வரவிருக்கும் தேர்தலில் National Democratic Alliance அமோக வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நட...