நொய்யல் நதியின் முன்னாள் தோற்றத்திற்கு பார்வையாளர்களை அழைத்துச்சென்ற பக்தி நிகேதன் நாட்டிய அமைப்பினர்


கொங்கு மண்டலத்தின் நீராதாரமாகவும், மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள விலங்குகளின் வாழ்வாதாரமாகவும் திகழ்ந்தது நொய்யல் நதி பல்வேறு விதமான உயிரினங்களின் நீர்த்தேவையினை ஒரு காலத்தில் நொய்யல் பூர்த்தி செய்து வந்தது. ஆனால், மனிதர்களின் வளர்ச்சி மற்றும் சரியான பராமறிப்பின்மையால் நொய்யல் நதி தற்போது வழித்தடமாக மாறியுள்ளது. இதனை மீண்டும் மீட்டெடுத்து நொய்யல் நதியை செழிப்படையச் செய்ய வேண்டும் என பல தன்னார்வலர்களும், சமூக ஆர்வலர்களும் முயற்சித்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக பக்தி நாட்டிய நிகேதன் என்னும் நாடக அமைப்பின் சார்பில் நொய்யல் நதி குறித்தான ஒரு கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதனை அவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கருணசாகரி ஏற்பாடு செய்திருந்தார். 



இந்த நாடக நிகழ்வின் போது அந்த அமைப்பின் நடனக் குழுவினர் நொய்யலின் கடந்தகாலத் தோற்றத்தினை அப்படியே நடனமாக வெளிப்படுத்தி பார்வையாளர்களைக் கவர்ந்தனர்.

ஆறுகள் தான் தண்ணீரின் அடிப்படை ஆதாரமாக உள்ளது. ஆனால், மக்கள் வசிக்கும் பகுதியில் குழாய்களில் நீர் வருவதினால் மக்களுக்கு நதிகள் அழிந்துவருவது குறித்து சிறிதும் கவலையில்லை. அதுவும் ஒருகட்டத்தில் வற்றிவிடும். அப்போது, நீரின் ஆதாரமான ஆறுகள் குறித்து நாம் கவலையடைவோம்.

பல்வேறு ஆண்டுகலாக கோவை மண்டலத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகள் நொய்யலால் பயனடைந்து வந்தன. நாம் அதனை அழித்ததன் தொடர்ச்சி அதனால் பயனடைந்து வந்த விவசாயம் மாய்ந்துபோனது. அதனை நம்பி இருந்த பல உயிரினங்கள் இடம்பெயர்ந்தன.

அழிவின் பாதையில் இருந்து இயற்கையையும், நம்மையும் பாதுகாக்க நொய்யலை மீட்டெடுப்பது அவசியம் என்ற கருத்தினை மையமாகக் கொண்டு பக்தி நாட்டிய நிகேதன் அமைப்பினர் நடனம் நிகழ்த்தினர். நடனக் கலைஞர்களின் சிறப்பான நடனம் பார்வையாளர்களை நொய்யலின் முந்தைய காலத்திற்கே அழைத்துச் சென்றதாக அமைந்தது. கலைஞர்கள் தங்கள் நடனத்திறன் மூலம் நொய்யலை திரும்பப் பெறுவது, அதை நாம் இன்னும் பொறுப்புடனும், சூழலியல் நட்புடனும் பாதுகாப்பது என்று வலியுறுத்தினர்.





























Newsletter

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...

பொள்ளாச்சியில் அதிமுக தேர்தல் பரப்புரை: Jayaraman வாக்குச் சேகரிப்பு

பொள்ளாச்சி அண்ணா நகர் மற்றும் விஜயபுரம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் Jayaraman தலைமையில் அதிமுக கட்சியினர் தீவிர வாக்குச...

கோவை மருதமலை முருகன் கோவிலில் NDA வெற்றிக்காக சிறப்பு பூஜை

கோவை மருதமலை முருகன் கோவிலில் வரவிருக்கும் தேர்தலில் National Democratic Alliance அமோக வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நட...