ஈஷா வித்யா குருகுல பள்ளி நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கலந்து கொண்டதற்கு மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்.


கோவையில் முறையான அங்கீகாரம் இன்றி செயல்பட்டு வரும் ஈஷா வித்யா குருகுல பள்ளி நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கலந்து கொண்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.

கோவையை அடுத்த வெள்ளிங்கிரி மலையடிவார பகுதியில் உள்ள ஈஷா வித்யா குருகுல உறைவிட பள்ளி முறையான அனுமதி மற்றும் அங்கீகாரம் இன்றி செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அப்பள்ளியின் பத்தாம் ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி நடத்தப்படும் தேசிய கல்வி மாநாட்டில், மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கலந்து கொண்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநில குழு உறுப்பினரும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான பி.ஆர்.நடராசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈஷா வித்யா பள்ளியில் உரிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை எனவும், முறையான அங்கீகாரம் இன்றி செயல்பட்டு வருவதாக எழுந்த புகாரின் பேரில், கடந்த ஜீன் மாதம் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் நல பாதுகாப்பு ஆணைய உறுப்பினர்கள் ஆய்வு நடத்த சென்ற போது பள்ளி வளாகத்திற்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதாவும், பள்ளி அங்கீகாரம் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மாநில அரசு துறை நிறுவனமான குழந்தைகள் நல ஆணையத்தையே ஆய்வு செய்ய விடாமல் தடுத்திட்ட ஈஷா பள்ளி நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் தவிர்த்திருக்க வேண்டுமெனவும், இது சட்டத்தை மதிக்காத ஈஷா நிர்வாகத்திற்கு உதவி செய்வது போல் ஆகிவிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அங்கீகாரமோ, பள்ளி நடத்த அனுமதி பெறாத பள்ளிகள் நடத்தும் நிகழ்ச்சிகளில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்பது அவர்களை ஊக்குவிப்பது போல் ஆகிவிடும் எனவும், இதர கல்வி நிறுவனங்களும் முறைகேடுகளில் ஈடுபட வழிவகுக்கும் எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். மாநில அரசுகளின் அனுமதி மற்றும் அங்கீகாரம் பெறாத பள்ளி நிகழ்ச்சிகளில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்பதற்கு தடை விதிக்க வேண்டுமெனவும், மத்திய அமைச்சர் பிரகாச்ஜ் ஜவடேகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பி.ஆர்.நடராசன் வலியுறுத்தியுள்ளார்.

Newsletter

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...

பொள்ளாச்சியில் அதிமுக தேர்தல் பரப்புரை: Jayaraman வாக்குச் சேகரிப்பு

பொள்ளாச்சி அண்ணா நகர் மற்றும் விஜயபுரம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் Jayaraman தலைமையில் அதிமுக கட்சியினர் தீவிர வாக்குச...

கோவை மருதமலை முருகன் கோவிலில் NDA வெற்றிக்காக சிறப்பு பூஜை

கோவை மருதமலை முருகன் கோவிலில் வரவிருக்கும் தேர்தலில் National Democratic Alliance அமோக வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நட...