எஸ்என்ஆர் கல்லூரியில் சென்னையின் எஃப்சி வீரர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி

எஸ்என்ஆர் சன்ஸ் கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் பைவலைவ் அறிமுகம் எஸ்என்ஆர் கலையரங்கத்தில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், கால்பந்து விளையாட்டு சென்னையின் எஃப்சி வீரர்கள் கலந்து கொண்டனர்.எஸ்என்ஆர் சன்ஸ் கல்லூரி மற்றும் சென்னை ஆன்லீஷ் விளையாட்டு எல்எல்பி நிறுவனம் இணைந்து 8,000 சதுர அடி இடத்தில் விளையாட்டு உள்கட்டமைப்பு வசதி அமைக்க ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. சுமார் ஒரு கோடி செலவில் எஸ்என்ஆர் சன்ஸ் கல்லூரியில் இந்த புல்தரை கால்பந்து வசதி "பைவலைவ்" முத்திரையுடன் சர்வதேச தரத்தில் பிப்ரவரி 2017ல் அமைய உள்ளது. வழக்கமான போட்டிகள் முகாம்கள் நடத்த பள்ளிகள், கல்லூரிகள், பெருநிறுவனங்கள் உதவியுடன் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.



பின்னர் நிகழ்ச்சியில், சென்னையின் எஃப்சி வீரர்கள் கலந்து கொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கால்பந்து வீரர்களான ஜெஜெ  (இந்தியாவின் சிறந்த வீரர்) காங்கெபாம் தொய் சிங் (தற்காலிக பெங்களூரு எஃப்சி வீரர் - சென்னையின் எஃப்சி வீரர் இந்திய சூப்பர் லீக் மிட்ஃபீல்டராக இருக்கும் கால்பந்து வீரர்) ஈடர் மோன்டெய்ரா பெர்னாண்டஸ், ஏதேர் என அழைக்கப்படும், சென்னையின் எஃப்சி வீரர் பிரேசிலிய கால்பந்து வீரர்) மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்கள்.

இதில், ஸ்ரீ ராமகிருஷ்ணா குழும நிறுவனங்களில் இருந்து 1000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். நிர்வாகி சுந்தர், தலைமை வர்த்தக அதிகாரி ஸ்வாதி ரோஹித், முதன்மை செயல் அதிகாரி சி வி ராம்குமார், எஸ்என்ஆர் சன்ஸ் கல்லூரி முதல்வர் கருணாகரன், கோவை கால்பந்து கழக செயலாளர் ராஜா, நிறுவனங்களின் தலைவர்கள், கல்வியாளர்கள், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...

பொள்ளாச்சியில் அதிமுக தேர்தல் பரப்புரை: Jayaraman வாக்குச் சேகரிப்பு

பொள்ளாச்சி அண்ணா நகர் மற்றும் விஜயபுரம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் Jayaraman தலைமையில் அதிமுக கட்சியினர் தீவிர வாக்குச...

கோவை மருதமலை முருகன் கோவிலில் NDA வெற்றிக்காக சிறப்பு பூஜை

கோவை மருதமலை முருகன் கோவிலில் வரவிருக்கும் தேர்தலில் National Democratic Alliance அமோக வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நட...