முதல்வர் ஜெயலலிதா அவசரப் பிரிவில் இருந்து வார்டுக்கு மாற்றப்பட உள்ளார்

தமிழக முதல்வர் ஜெயலலிதா அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்து விரைவில் தனி வார்டுக்கு மாற்றப்பட உள்ளதாக அதிமுக மூத்த தலைவர் சி. பொன்னையன் தெரிவித்துள்ளார்.

அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நுரையீரலில் ஏற்பட்டிருந்த தொற்று பாதிப்பு முழுவதும் சரியாகிவிட்டது. அபாய கட்டத்தை அவர் தாண்டிவிட்டார். செயற்கை சுவாசக் கருவியும் அகற்றப்பட உள்ளது. தற்போது அது அவ்வப்போது மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்று அதிமுக மூத்த தலைவரும், செய்தித் தொடர்பாளருமான பொன்னையன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு வாரமாக அவர் கஞ்சி போன்ற உணவுகளை உட்கொண்டு வருகிறார். தற்போது அவருடன் இருப்பவர்களுடன் ஜெயலலிதா பேசி வருகிறார் என்றும் கூறினார் பொன்னையன்.

காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைவு காரணமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22ம் தேதி சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டிருந்தார்.

Newsletter

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...

பொள்ளாச்சியில் அதிமுக தேர்தல் பரப்புரை: Jayaraman வாக்குச் சேகரிப்பு

பொள்ளாச்சி அண்ணா நகர் மற்றும் விஜயபுரம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் Jayaraman தலைமையில் அதிமுக கட்சியினர் தீவிர வாக்குச...

கோவை மருதமலை முருகன் கோவிலில் NDA வெற்றிக்காக சிறப்பு பூஜை

கோவை மருதமலை முருகன் கோவிலில் வரவிருக்கும் தேர்தலில் National Democratic Alliance அமோக வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நட...