வால்பாறை குடியிருப்பு பகுதியில் யானைகள் அட்டகாசத்தால் மக்கள் அச்சம்

வால்பாறை பகுதியில் சில மாதங்களாக மழையின்றி வறட்சி ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது ஒரு வாரகாலமாக மழை பெய்து வருகிறது. இருப்பினும் அடர்ந்த வனப்பகுதியில் வறட்சி நிலை இன்னும் சீராகாததால் யானைக் கூட்டம் உணவு மற்றும் தண்ணீருக்காக பொதுமக்களின் குடியிருப்பு பகுதியில் புகுந்து சேதம் செய்து வருகின்றது. 

இந்நிலையில், வால்பாறைக்கு உட்பட்ட காஞ்சமலை எஸ்டேட் பகுதியில் புகுந்த காட்டு யானைக் கூட்டம் அப்பகுதியில் இருந்த ரேஷன் கடையின் கதவு மற்றும் ஜன்னல்களை உடைத்து அரிசி மூட்டையை இழுத்து சேதம் செய்ததுடன் அப்பகுதியிலேயே தற்போது முகாமிட்டுள்ளது. 



அதேப்போல், கருமலை எஸ்டேட் பகுதியில் தேயிலைத் தோட்ட மேலாளரான தில்லை என்பவரின் வீட்டின் கதவை காட்டு யானை ஒன்று உடைத்து சேதப்படுத்தியது. சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அந்தக் காட்டுயானையை அருகில் இருந்த வனப்பகுதிக்குள் விரட்டினர். 

மேலும், பன்னிமேடு, வாகமலை, சோலையார், அக்காமலை, சிறுகுன்றா உள்ளிட்ட பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைக்கூட்டம் முகாமிட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியில் நடமாட வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அக்காமலை எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகள் தேயிலைத் தோட்டத்திற்குள் முகாமிட்டுள்ளதால் தேயிலை பறிக்கும் பணி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் வேகமாக பரவும் 'Madras Eye' நோய்: மக்கள் அலெர்ட்டாக இருக்க டாக்டர்கள் எச்சரிக்கை

கோவையில் 'Madras Eye' நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால், நாளொன்றுக்கு 10 பேர் வீதம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற...

குமரகுரு கல்வி நிறுவனங்களில் 1,675 மாணவர்களுக்கு ₹1.6 கோடி மகாத்மா காந்தி மெரிட் ஸ்காலர்ஷிப்

குமரகுரு கல்வி நிறுவனங்களில் இன்று மகாத்மா காந்தி மெரிட் ஸ்காலர்ஷிப் விழா நடைபெற்றது. கல்வி, விளையாட்டு மற்றும் NCC ஆகிய...

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...