கல்லூரி மாணவன் அறையில் கணினித் திருட்டு- 4 பேர் கைது


கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரத்சந்திரபாபு. இவரது மகன் சந்திரதாஸ் (22). கோவை மாவட்டம் சூலூரிலுள்ள சப்தகிரி நகர் பகுதியில் அறையெடுத்து தங்கி அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.இ. இறுதியாண்டு படித்து வருகிறார். இவருடன் அறையில் மொத்தம் 3 பேர் தங்கியுள்ளனர்.

இந்நிலையில், புதனன்று சந்திரதாஸ் உள்ளிட்ட அனைவரும் வெளியில் சென்றுவிட்டு அறைக்கு திரும்பியுள்ளனர். அப்போது அறையில் 4 பேர் கொண்ட கும்பல் மடிக்கணினி உள்ளிட்ட பொருட்களை திருடிக்கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. உடனடியாக அவர்களைப் பிடித்து சூலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதனைத்தொடர்ந்து காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் சூலூர் பகுதியைச் சேர்ந்த முத்துகுமார் (21), ஜெயசுந்தர் (21), பரதன், சுபாஷ் என்பதும், அதேக்கல்லூரியில் பி.இ. இறுதியாண்டு படித்து வருவதும் தெரியவந்துள்ளது. அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த காவலர்கள், நான்குபேரையும் சிறையில் அடைத்தனர்.

Newsletter

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...

பொள்ளாச்சியில் அதிமுக தேர்தல் பரப்புரை: Jayaraman வாக்குச் சேகரிப்பு

பொள்ளாச்சி அண்ணா நகர் மற்றும் விஜயபுரம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் Jayaraman தலைமையில் அதிமுக கட்சியினர் தீவிர வாக்குச...

கோவை மருதமலை முருகன் கோவிலில் NDA வெற்றிக்காக சிறப்பு பூஜை

கோவை மருதமலை முருகன் கோவிலில் வரவிருக்கும் தேர்தலில் National Democratic Alliance அமோக வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நட...