மாயமான மலேசிய விமானம் விமானியால் மூழ்கடிக்கப்பட்டதா? விமான பாகங்கள் ஆய்வில் பகீர்

சிட்னி: மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து, சீன தலைநகர் பீஜிங் நோக்கி கடந்த 2014ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி, 239 பயணிகளுடன் சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 777 ரக விமானம் மாயமானது. இதை தேடி ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரை பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. ஆனாலும் விமானத்தை கண்டு பிடிக்க முடியவில்லை. இந்நிலையில், தான்சானியா அருகே மலேசிய விமானத்தின் இறக்கை மீட்கப்பட்டது. மேலும் 20 சிறிய பாகங்கள் ஆப்ரிக்க கடலோர பகுதிகளில் மீட்கப்பட்டன. இவற்றில் 3 மட்டுமே மலேசிய விமானத்தின் பாகங்கள். இவற்றின் மூலம் முக்கிய தகவல் கிடைக்குமா என ஆஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்புத்துறை ஆய்வு மேற்கொண்டது. 

விமான இறக்கையில் உள்ள பிளாப் தகடுகளை ஆய்வு செய்தபோது, அவை விமானம் தரையிறங்கும்போது இருக்கும் நிலையில் இல்லை என்பது தெரியவந்தது. செயற்கைக்கோளுடன் விமானத்துக்கு இருந்த கடைசி தகவல் தொடர்பை ஆராய்ந்த போதும், மிக உயரமான நிலையில் இருந்து வேகமாக கீழே இறங்கியது  தெரியவந்துள்ளது. இதனால் விமானம் கட்டுப்பாடின்றி திடீரென வேகமாக தரையிறங்கி கடலில் மூழ்கியிருக்கலாம் என கருதப்படுகிறது. இதனால், மலேசியா விமானம் அதன் விமானியாலேயே வேண்டுமென்றே கடலில் மூழ்கடிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை நிபுணர்கள் எழுப்பியுள்ளனர்.

Newsletter

கோவையில் வேகமாக பரவும் 'Madras Eye' நோய்: மக்கள் அலெர்ட்டாக இருக்க டாக்டர்கள் எச்சரிக்கை

கோவையில் 'Madras Eye' நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால், நாளொன்றுக்கு 10 பேர் வீதம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற...

குமரகுரு கல்வி நிறுவனங்களில் 1,675 மாணவர்களுக்கு ₹1.6 கோடி மகாத்மா காந்தி மெரிட் ஸ்காலர்ஷிப்

குமரகுரு கல்வி நிறுவனங்களில் இன்று மகாத்மா காந்தி மெரிட் ஸ்காலர்ஷிப் விழா நடைபெற்றது. கல்வி, விளையாட்டு மற்றும் NCC ஆகிய...

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...