ஆர்.எஸ்.புரம் பகுதியில் வாகனம் நிறுத்துவது குறித்து மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்.


கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் தலைமையில் ஆர்.எஸ்.புரம் சாலையோரத்தில் ஒற்றைப்படை மற்றும் இரட்டைப்படை மாதங்களில் வாகனங்கள் நிறுத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் புதனன்று (இன்று) நடைபெற்றது.



இதுகுறித்து க.விஜயகார்த்திகேயன் தெரிவிக்கையில், வருகின்ற நவம்பர் மாதம் 15ம் தேதி முதல் முதற்கட்டமாக ஒத்திகையாக ஒற்றைப்படை மற்றும் இரட்டைப்படை மாதங்களில் வாகனங்கள் நிறுத்துவது நடைமுறைக்கு வருகிறது. மாநகராட்சி சார்பாக சாலைக் குறியீடு அமைத்தல், சாலையோரம் இருபுரங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் மற்றும் பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் அறிவிப்பு பலகைகள் அமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும். 

மேலும், பொதுமக்கள் சாலை விதிமுறைகளை முறையாக கடைபிடித்து பாதுகாப்பாக செல்ல வேண்டும். சாலையோர பணிகளில் ஈடுபடும் போது காவல் துறையினருக்கும், தன்னார்வலர்களுக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் கூறினார். 

இக்கூட்டத்தில், காவல் உதவி ஆணையர் மகுடபதி, வியாபார நிறுவன உரிமையாளர் அன்னபூரணா சீனிவாசன், ரவிசாம், ஹேமா கண்ணா, தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த பிரமுகர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை உக்கடம் பெரிய குளத்தில் மிதக்கும் சோலார் பேனல்: கோடை வெயிலால் மின் உற்பத்தி இரு மடங்கு அதிகரிப்பு

கோவையில் வெயில் மிகுதியாக உள்ளதால் உக்கடம் பெரிய குளத்தில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் சோலார் பேனல் மூலம் மின்சார உற்பத்த...

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேர்த் திருவிழாவுக்கு தடை: அண்ணாமலை கண்டனம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் பங்குனி உத்திர தேர்த் திருவிழாவுக்கு பொதுப்பணித்துறை தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்து...

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...