கப்பல் உடைக்கும் தளத்தில் வெடிவிபத்து: பாகிஸ்தானில் 10 தொழிலாளர்கள் சாவு

பாகிஸ்தானில் கப்பல் உடைக்கும் தளத்தில் பழைய எண்ணெய்க் கப்பலை உடைக்கும் பணியின்போது ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 10 தொழிலாளர்கள் பலியாகினர். 50 பேர் காயமடைந்தனர். 30 தொழிலாளர்களின் நிலைமை குறித்துத் தகவல் இல்லை.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம், கடானி நகரிலுள்ள கப்பல் உடைக்கும் தளத்தில் எண்ணெய் ஏற்றிச் செல்லும் பயன்படுத்தப்படாத பழைய சரக்குக் கப்பலை உடைக்கும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றுக் கொண்டிருந்தது.

100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அந்தப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தீச்சுவாலை மூலம் இரும்பை உருக்கி வெட்டும் "வெல்டிங்' முறையில் கப்பல் உடைப்புப் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அந்த எண்ணெய்க் கப்பலில் திடீரென்று வெடிவிபத்து ஏற்பட்டது.

கப்பலின் பகுதிகள் தொடர்ந்து பல முறை வெடித்துச் சிதறியதில் அந்தக் கப்பல் முழுவதும் தீப்பிடித்தது.

இதில், 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 50 பேர் காயமடைந்தனர்.

விபத்துக்குள்ளான கப்பலில் இருந்து 25-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்ட நிலையில், கப்பலுக்குள் சிக்கியுள்ள சுமார் 30 தொழிலாளர்களின் நிலைமை குறித்து தகவல் இல்லை.

கொழுந்து விட்டு எரியும் எண்ணெய்க் கப்பலில் மேலும் வெடிவிபத்து ஏற்படலாம் என்பதால், மீட்புப் பணிகள் தேக்கமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். காயமடைந்த அனைவரும் கராச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அதிபர் மம்னூன் ஹுசைனும், பிரதமர் நவாஸ் ஷெரீஃபும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தனர். இவ்வாறு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Newsletter

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...

பொள்ளாச்சியில் அதிமுக தேர்தல் பரப்புரை: Jayaraman வாக்குச் சேகரிப்பு

பொள்ளாச்சி அண்ணா நகர் மற்றும் விஜயபுரம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் Jayaraman தலைமையில் அதிமுக கட்சியினர் தீவிர வாக்குச...

கோவை மருதமலை முருகன் கோவிலில் NDA வெற்றிக்காக சிறப்பு பூஜை

கோவை மருதமலை முருகன் கோவிலில் வரவிருக்கும் தேர்தலில் National Democratic Alliance அமோக வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நட...