காஷ்மீரின் பூஞ்ச், ரஜோரி பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்: ராணுவ வீரர் உட்பட 2 பேர் பலி

காஷ்மீரின் பூஞ்ச், ரஜோரி உட்பட பல பகுதிகளில், பாகிஸ்தான் படையினர் அத்துமீறி நேற்று தொடர்ந்து தாக்குதல் நடத்தினர்.

காஷ்மீர் எல்லையில் இந்திய வீரர் மான்ஜீத் சிங்கை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்று உடலைத் துண்டாக்கினர். இதில் அதிர்ச்சி அடைந்த ராணுவத்தினர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவ முகாம்கள் மீது 2 நாட்களுக்கு முன்னர் அதிரடி தாக்குதல் நடத்தினர். இதில் 4 முகாம்கள் அழிக்கப்பட்டன. இந்தத் தாக்குதலில் 20-க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் வீரர்கள் பலியாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் உள்ள மென்தாம் செக்டார் மற்றும் ரஜோரி பகுதி யில் மன்காட், பாலாகோட் ஆகிய இடங்களில் எல்லைக் கட்டுப் பாட்டு கோட்டருகே நேற்று காலை 9 மணியளவில் பாகிஸ்தான் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்

மேலும், சிறிய ரக 120 மி.மீ., மற்றும் 82 மி.மீ. பீரங்கி குண்டுகளை இந்தியப் பகுதியில் வீசி தாக்குதல் நடத்தினர்.இரு தரப்புக்கும் இடையில் பல மணி நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் ரஜோரி செக்டார் பகுதியில் பாகிஸ்தான் துப்பாக்கிச் சூட்டில் பிமல் தமாங்(20) என்ற ராணுவ வீரர் பலியானார். மேலும் தவ்ஸீர் பீ(50) என்ற பெண்ணும் பலியானார்.

Newsletter

கோவை உக்கடம் பெரிய குளத்தில் மிதக்கும் சோலார் பேனல்: கோடை வெயிலால் மின் உற்பத்தி இரு மடங்கு அதிகரிப்பு

கோவையில் வெயில் மிகுதியாக உள்ளதால் உக்கடம் பெரிய குளத்தில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் சோலார் பேனல் மூலம் மின்சார உற்பத்த...

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேர்த் திருவிழாவுக்கு தடை: அண்ணாமலை கண்டனம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் பங்குனி உத்திர தேர்த் திருவிழாவுக்கு பொதுப்பணித்துறை தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்து...

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...