8 சிமி தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்: RSS-க்கு தொடர்பு இருக்கலாம் என காங்., குற்றச்சாட்டு

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் சிறையிலிருந்து தப்பிய 8 சிமி தீவிரவாதிகள் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் இருப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் குற்றம்சாட்டியுள்ளார். போபாலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் நாடு முழுவதும் கைதிகள் சிறையிலிருந்து தப்பிச் செல்வது தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறியுள்ளார். இது முக்கியமான பிரச்சனை என கூறியுள்ள அவர், ஆனால் சிமி தீவிரவாதிகள் என்கவுன்டரில் கொல்லப்பட்டதன் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் அல்லது அவற்றை சார்ந்த சில அமைப்புகளுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் சிமி தீவிரவாதிகள் போலி என்கவுன்டரில் கொல்லப்பட்டதாக கூறப்படுவதை மத்தியபிரதேச காவல்துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது. என்கவுன்டர் வீடியோ காட்சியில் அசைவற்று கிடக்கும் தீவிரவாதிகள் மீது மீண்டும் துப்பாக்கியால் சுடுவது போன்ற காட்சியும் இடம் பெற்றிருந்தது. இதனால் சிமி தீவிரவாதிகள் கொல்லப்பட்டது போலியானது என்ற விமர்சனம் எழுந்துள்ளது. ஆனால் இதனை நிராகரித்துள்ள காவல்துறையினர் இது திட்மிட்டு நடத்தப்படவில்லை என்றனர். தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னரே பதில் தாக்குதல் நடத்தப்பட்டதாக விளக்கமளித்துள்ளனர். என்கவுன்டரின் உண்மை தன்மை குறித்து கேள்வி எழுந்துள்ள நிலையில், அது தொடர்பான வீடியோவின் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.    

சுட்டு கொல்லப்பட்ட தீவிரவாதிகள் சிறையில் இருந்து தப்ப உதவியர்கள் குறித்தும் தேசிய புலனாய்வு மூலம் விசாரணை நடத்தப்படும் என மத்தியபிரதேச அரசு அறிவித்துள்ளது. இதுபற்றி பேசிய அம்மாநில உள்துறை அமைச்சர் பூபேந்தர் சிங், இந்த தீவிரவாதிகள் ஏற்கனவே சிறையில் இருந்து தப்பிச் சென்று பின்னர் மீண்டும் கைது செய்யப்பட்டவர்கள் ஆவர் என்றார்.  முன்னதாக போபால் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த தீவிரவாதிகள் 8 பேர் நேற்று அதிகாலை சிறைகாவலரை கொன்று விட்டு தப்பினர். பின்னர் தப்பிச் சென்ற அவர்களை புறநகர் பகுதியில் சுற்றிவளைத்த போலீஸார் அவர்களை சுட்டு கொன்றனர்

Newsletter

கோவை உக்கடம் பெரிய குளத்தில் மிதக்கும் சோலார் பேனல்: கோடை வெயிலால் மின் உற்பத்தி இரு மடங்கு அதிகரிப்பு

கோவையில் வெயில் மிகுதியாக உள்ளதால் உக்கடம் பெரிய குளத்தில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் சோலார் பேனல் மூலம் மின்சார உற்பத்த...

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேர்த் திருவிழாவுக்கு தடை: அண்ணாமலை கண்டனம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் பங்குனி உத்திர தேர்த் திருவிழாவுக்கு பொதுப்பணித்துறை தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்து...

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...