ஓய்வுபெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான குறை நிவர்த்தி முகாம்

கோவை மாவட்டத்தில் பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றி, ஓய்வுபெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களுக்கு சேரவேண்டிய ஓய்வூதியம் மற்றும் இதர ஓய்வூதியப் பலன்கள் இதுவரை கிடைக்காமல் இருந்தால், இது குறித்து தங்கள் குறைகள் மற்றும் எந்த அலுவலர்கள் மூலம் குறை நிவர்த்தி செய்யப்பட வேண்டும் போன்ற விவரங்களை தெளிவாக ஓய்வூதிய குறைதீர்ப்பு மாதிரிப் படிவத்தில் எழுதி மனுக்களை இரட்டை பிரதிகளில் கோயமுத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு 09/11/2016க்குள் கிடைக்கும்படி நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ அனுப்பி வைக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

ஓய்வூதிய குறைதீர்ப்பு மாதிரிப் படிவத்தில் எழுத வேண்டியவை:


1.பெயர் மற்றும் முகவரி :
2.பி.பி.ஓ எண் :
3.ஓய்வு பெற்ற நாள் :
4.கடைசியாக வகித்த பதவி மற்றும் துறை :
5.குறைகள் விவரம் (தனித்தாளில் விரிவாக எழுதி படிவத்தில் இணைக்கவும்) :
6.முந்தைய தகவல் ஏதும் இருப்பின் விவரம் :
7.இது தொடர்பாக வழக்கு ஏதும் தொடர்ந்திருந்தால் அதன் விவரம் :
8.குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டிய அலுவலகம் மற்றும் அலுவலர் விவரம் :

மேலும், இதுதொடர்பாக ஓய்வூதியர் குறைகளை நேர்முகக் கூட்டம் வருகிற 15/11/2016 செவ்வாய் அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் காலை 10:30 மணிக்கு மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் சென்னை ஓய்வூதிய இயக்குனர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த நேர்முக கூட்டத்தில் ஓய்வுபெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...