எல்லை தாண்டி மீன் பிடிக்கும் விவகாரம் : இந்தியா, இலங்கை நவ.5ம் தேதி பேச்சுவார்த்தை

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி  மீன்பிடிப்பதாக கூறி, அவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவதும், கைது செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்பிரச்னை தொடர்பாக, இரு தரப்பு மீனவ பிரதிநிதிகள் 3 கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த தீர்வும் ஏற்படவில்லை. இந்நிலையில், இரு தரப்பு அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நவம்பர் 5ம் தேதி டெல்லியில் நடக்க உள்ளது.

இதில், இலங்கை தரப்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீரா, மீன்வளத்துறை அமைச்சர் மகிந்தா அமரவீரா தலைமையில் 10 பேர் கொண்ட மீனவ சங்கத்தினர் பங்கேற்க, வரும் 2ம் தேதி டெல்லி வர உள்ளதாக இலங்கையின் முன்னணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.அதில், மீனவர் பிரச்னை தொடர்பாக, அமைச்சர்கள் சமரவீரா, அமரவீரா ஆகியோர் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து பேச இருப்பதாகவும், இந்திய, இலங்கை மீனவர் சங்கத்தினர் இடையே பேச்சுவார்த்தை நடக்க இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது

Newsletter

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...

பொள்ளாச்சியில் அதிமுக தேர்தல் பரப்புரை: Jayaraman வாக்குச் சேகரிப்பு

பொள்ளாச்சி அண்ணா நகர் மற்றும் விஜயபுரம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் Jayaraman தலைமையில் அதிமுக கட்சியினர் தீவிர வாக்குச...

கோவை மருதமலை முருகன் கோவிலில் NDA வெற்றிக்காக சிறப்பு பூஜை

கோவை மருதமலை முருகன் கோவிலில் வரவிருக்கும் தேர்தலில் National Democratic Alliance அமோக வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நட...