ஐந்து மண்டலங்களிலுள்ள ஆக்கிரமிப்பு இடங்களை மீட்க நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சியில் ஐந்து மண்டலங்களிலுள்ள மாநகராட்சி ‘பொது ஒதுக்கீட்டு இடங்கள்’ (ரிசர்வ் சைட்) கண்டறியப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவிலுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றுவது தொடர்பாக நகரமைப்பு அலுவலர்களுடன் ஆலோசனை செய்து ஆக்கிரமிப்புகளை விரைவில் அகற்ற மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் சிறப்பு தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையியில்:- “கோயம்புத்தூர் மாநகராட்சியிலுள்ள ஐந்து மண்டலங்களான கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மத்தியம் ஆகிய வார்டு பகுதிகளிலுள்ள மாநகராட்சி பொது ஒதுக்கீட்டு இடங்களை உதவி நகரமைப்பு அலுவலர்கள் மூலம் இடங்களை கண்டறிந்து, சம்பந்தப்பட்ட அலுவலருடன் ஆலோசனைகள் செய்து ஆக்கிரமிப்பு இடங்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 

மேலும், கிழக்கு மண்டலத்திலுள்ள 20 வார்டுகளில் அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவுகளில் சுமார் 13 லட்சத்து 78 ஆயிரத்து 552.20 சதுரமீட்டர் அளவிலுள்ள 293 பொது ஒதுக்கீட்டு இடங்களும், மேற்கு மண்டலத்திலுள்ள 20 வார்டுகளில் அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவுகளில் சுமார் 10 லட்சத்து 29 ஆயிரத்து 952.275 சதுரமீட்டர் அளவிலுள்ள 439 பொது ஒதுக்கீட்டு இடங்களும், வடக்கு மண்டலத்திலுள்ள 20 வார்டுகளில் அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவுகளில் சுமார் 6 லட்சத்து 3 ஆயிரத்து 645.57 சதுரமீட்டர் அளவிலுள்ள 506 பொது ஒதுக்கீட்டு இடங்களும், தெற்கு மண்டலத்திலுள்ள 20 வார்டுகளில் அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவுகளில் சுமார் 6லட்சத்து 60 ஆயிரத்து 812.51 சதுரமீட்டர் அளவிலுள்ள 111 பொது ஒதுக்கீட்டு இடங்களும், மத்திய மண்டலத்திலுள்ள 20 வார்டுகளில் அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவுகளில் சுமார் 1 லட்சத்து 45 ஆயிரத்து 373.86 சதுரமீட்டர் அளவிலுள்ள 60 பொது ஒதுக்கீட்டு இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதில் சில பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளது. இதன் மீது அலுவலர்களுடன் ஆலோசனை செய்து துரிதமான முறையில் விரைவில் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மேலும், மாநகராட்சி பொது ஒதுக்கீட்டு இடங்கள் (ரிசர்வ் சைட்) பற்றி பொது மக்கள் பயன்பெறும் வகையில் ஏதுவாக கோயம்புத்தூர் மாநகராட்சி இணைய தளமான (www.ccmc.gov.in) என்ற முகவரியில் உள்ள (Reserved site details) என்ற இணைப்பில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு  மாநகராட்சி ஆணையாளர் மற்றம் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மண்டல அலுவலர்கள் பயிற்சி நிகழ்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக 10 தொகுதிகளுக்கான 366 மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்டல அலுவலர்க...

T20 உலகக்கோப்பை வீரர் சஞ்சு சாம்சன் கோவை ADISSIA நிறுவனத்தின் Brand Ambassador ஆனார்

T20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், கோவையைச் சேர...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் DST-FIST ஆதரவுடன் ₹1 கோடி மதிப்பில் ஆராய்ச்சி உள்கட்டமைப்பு வலுப்படுத்தல்

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மார்ச் 25, 2026 அன்று DST-FIST நிதியுதவியுடன் ₹1 கோடி மதி...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து 'கலைத் தாரகை' விருது வழங்கும் விழா

கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து விருது வழங்கும் விழா நடை...

பள்ளபாளையத்தில் புதிய ஆட்டோமொபைல் கடையினை திறந்து வைத்தார் திமுக கழக செயலாளர் முருகேசன்

கோவை தெற்கு மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி பாப்புலர் கார்டன் பகுதியில் அமைந்துள்ள புதிய ஆட்டோமொபைல் கடையினை திமுக கழக ச...

கோவையில் செல்போனில் பேசியபடி நடந்த இளைஞர் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து பலி

கோவை வடவள்ளியில் மனைவியுடன் செல்போனில் பேசியபடி மாடிக்கு நடந்து சென்ற ஜேசிபி ஆபரேட்டர் விவேக் (33) இரண்டாவது மாடியில் இர...