கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மண்டல அலுவலர்கள் பயிற்சி நிகழ்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக 10 தொகுதிகளுக்கான 366 மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்டல அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் Pawan Kumar Giriyappanar தலைமையில் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பயிற்சி கூட்டம் இன்று நடைபெற்றது. வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாள்வது குறித்த விரிவான பயிற்சி வழங்கப்பட்டது.


Coimbatore: தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 தொடர்பாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் இன்று (25.03.2025) ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர்பவன் குமார் தலைமையில், மாநகராட்சி ஆணையாளர்சிவகுரு பிரபாகரன் முன்னிலையில் இக்கூட்டம் நடைபெற்றது.



கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 115-மேட்டுப்பாளையம், 116-சூலூர், 117-கவுண்டம்பாளையம், 118-கோயம்புத்தூர் வடக்கு, 119-தொண்டாமுத்தூர், 120-கோயமுத்தூர் தெற்கு, 121-சிங்காநல்லூர், 122-கிணத்துக்கடவு, 123-பொள்ளாச்சி மற்றும் 124-வால்பாறை ஆகிய 10 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 366 எண்ணிக்கையிலான மண்டல அலுவலர்கள் மற்றும் 366 எண்ணிக்கையிலான உதவி மண்டல அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.



இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றுவது தொடர்பாகவும், வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்ற உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாள்வதும் குறித்தும் மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்டல அலுவலர்களுக்கு விரிவான பயிற்சி வழங்கப்பட்டது. இப்பயிற்சி கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்டல அலுவலர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றிட வேண்டுமென மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.



இக்கூட்டத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் பொள்ளாச்சி சார் ஆட்சியர் Ramakrishna Samy IAS, துணை ஆணையர் (கலால்) Dr. P Murugesan, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) Madhura, துணை ஆட்சியர் (பயிற்சி) Hari Priyanka, வட்டாட்சியர் (தேர்தல்) Thanikaivel மற்றும் மண்டல அலுவலர்கள், உதவி மண்டல அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...