205.5 மில்லியன் டாலர் அபராதமாக செலுத்த எம்ப்ரேயர் நிறுவனம் முடிவு

சாவ் பாவ்லோ: இந்தியா உள்ளிட்ட 4 நாடுகளுக்கு விமானங்களை விற்பனை செய்ய ஒப்பந்தங்களைப் பெற லஞ்சம் வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்ட பிரேசிலின் எம்ப்ரேயர் நிறுவனம் 205.5 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,379 கோடியை) அபராதமாக செலுத்த முடிவு செய்துள்ளது.

லஞ்சம்:

பிரேசில் நாட்டின் எம்ப்ரேயர் நிறுவனம் இந்தியா, டோம்னிக் குடியரசு, சவூதி அரேபியா, மொசாம்பிக் ஆகிய நாடுகளுக்கு விமானங்களை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தங்களைப் பெற, கோடிக்கணக்கான ரூபாயை லஞ்சமாக வழங்கியதாக குற்றச்சாட்டு உள்ளது. இதனை அமெரிக்க கோர்ட் (எஸ்.இ.சி.,) விசாரித்து வருகிறது.

விற்பனை:

இந்தியாவுடன் 3 விமானங்களை வாங்குவதற்காக கடந்த 2008ம் ஆண்டு எம்பயர் நிறுவனம் ஒப்பந்தம் செய்தது.

ரூ.1,391 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தைப் பெற இந்திய தரப்புக்கு ரூ.36 கோடி லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு உள்ளது. மேலும் டோம்னிக் குடியரசு (8 விமானங்கள்), சவூதி அரேபியா (3 விமானங்கள்), மொசாம்பிக்(2 விமானங்கள்) விற்பனை செய்ததாகவும், அதற்காக லஞ்சம் கொடுக்கப்பட்டு சுமார் ரூ.555 கோடி லாபம் அடைந்ததாகவும் எஸ்.இ.சி., சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அபராதம்:

இந்நிலையில் எம்ப்ரேயர் நிறுவனத்துக்கு 205.5 மில்லியன் டாலர் அபராதத்தை எஸ்.இ.சி., விதித்தது. இந்த அபராதத் தொகையை செலுத்த எம்ப்ரேயர் நிறுவனம் ஒப்புக்கொண்டதாக எஸ்.இ.சி. தெரிவித்துள்ளது.

எம்பயர் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில், இந்தியாவில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...

பொள்ளாச்சியில் அதிமுக தேர்தல் பரப்புரை: Jayaraman வாக்குச் சேகரிப்பு

பொள்ளாச்சி அண்ணா நகர் மற்றும் விஜயபுரம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் Jayaraman தலைமையில் அதிமுக கட்சியினர் தீவிர வாக்குச...

கோவை மருதமலை முருகன் கோவிலில் NDA வெற்றிக்காக சிறப்பு பூஜை

கோவை மருதமலை முருகன் கோவிலில் வரவிருக்கும் தேர்தலில் National Democratic Alliance அமோக வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நட...