தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனை - ஒருவர் கைது


கோவை, செல்வபுரம் அடுத்த தெலுங்கு வீதி பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக வெரைட்டிஹால் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து உடனடியாக அங்கு விரைந்த காவல் துறையினர் அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றுகொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் தடைசெய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில், அவர் செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரது மகன் ஸ்ரீனிவாசன் (41) என்பதும், கேரள லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து அவரிடம் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த லாட்டரி மற்றும் 30 ஆயிரத்து 750 ரூபாய் பணத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

மேலும், வழக்கு பதிவு செய்த காவலர்கள், ஸ்ரீனிவாசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...

பொள்ளாச்சியில் அதிமுக தேர்தல் பரப்புரை: Jayaraman வாக்குச் சேகரிப்பு

பொள்ளாச்சி அண்ணா நகர் மற்றும் விஜயபுரம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் Jayaraman தலைமையில் அதிமுக கட்சியினர் தீவிர வாக்குச...

கோவை மருதமலை முருகன் கோவிலில் NDA வெற்றிக்காக சிறப்பு பூஜை

கோவை மருதமலை முருகன் கோவிலில் வரவிருக்கும் தேர்தலில் National Democratic Alliance அமோக வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நட...

மேற்காசிய போர் நெருக்கடியை எதிர்கொள்ளும் வலிமை இந்தியாவுக்கு உண்டு - வானதி சீனிவாசன்

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மேற்காசிய போர் நெருக்கடியை இந்தியா வெற்றிகரமாக எதிர்கொள்கிறது என்றும், ம...