மேற்காசிய போர் நெருக்கடியை எதிர்கொள்ளும் வலிமை இந்தியாவுக்கு உண்டு - வானதி சீனிவாசன்

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மேற்காசிய போர் நெருக்கடியை இந்தியா வெற்றிகரமாக எதிர்கொள்கிறது என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதற்றத்தை ஏற்படுத்தும் அரசியல் மக்களிடம் எடுபடாது என்றும் தெரிவித்தார். எரிபொருள் விநியோகம் தடையின்றி நடைபெறுவதை வலியுறுத்தினார்.


Coimbatore: கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று வெளியிட்ட அறிக்கையில், மேற்காசிய போர் நெருக்கடியை இந்தியா வெற்றிகரமாக எதிர்கொண்டு வருவதாகவும், தேர்தல் காலத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அரசியல் மக்களிடம் எடுபடாது என்றும் தெரிவித்துள்ளார்.




25 நாட்களுக்கும் மேலாக நீடிக்கும் மேற்காசிய போரால் உலகமே கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு கப்பல்கள் கொண்டு வரும் கடல் பாதைகள் மூடப்பட்டுள்ளதால் உலகெங்கும் சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான நாடுகள் எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளன.


இந்தியாவில் எரிபொருள் விலை நிலைமை


ஆனால், 140 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழும் நம் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரவில்லை. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை சற்று உயர்ந்துள்ளது. ஈரான் உள்ளிட்ட மேற்காசிய நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து உரையாடி வருகிறார். அவர் மேற்கொண்ட ராஜதந்திர நடவடிக்கைகளால் ஹார்மூஸ் நீரிணை வழியாக இந்தியா கச்சா எண்ணெய் கப்பல்கள் வந்து கொண்டிருக்கின்றன.


இந்தியாவில் சுமார் 30 கோடி குடும்பங்கள் சமையல் எரிவாயு இணைப்பை பெற்றுள்ளன. அதில் சுமார் 20 கோடி இணைப்புகள் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த 2014 முதல் வழங்கப்பட்டவை. வீடுகளுக்கு சமையல் எரிவாயு தட்டுப்பாடு வந்துவிடக்கூடாது, குறிப்பாக குடும்பத் தலைவிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.


கொரோனா நெருக்கடி எதிர்கொண்ட அனுபவம்


பிரதமர் நரேந்திர மோடி நெருக்கடியை எதிர்கொள்வதில் வல்லவர் என்பதை நாட்டு மக்கள் அனைவரும் கொரோனா காலகட்டத்தில் பார்த்தார்கள். கொரோனா பொதுமுடக்கத்தால் 140 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியா பேரழிவை சந்திக்கும் என உலகமே கணித்தது. ஆனால், அந்த பேரிடரை திறமையாக எதிர்கொண்ட பிரதமர் மோடி, 40க்கும் அதிகமான நாடுகளுக்கும் தடுப்பூசி உள்ளிட்ட உதவிகளை செய்தார்.


அதுபோலவே மேற்காசிய போர் நெருக்கடியையும் பிரதமர் மோடி எதிர்கொள்வார் என்பது நாட்டு மக்களுக்குத் தெரியும். எனவே, இதுபற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவலைப்பட வேண்டும். வளைகுடா நாடுகளில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களை மோடி அரசு மீட்டுள்ளது.


வதந்திகள் தோல்வியடைந்தன


பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என வதந்தி பரப்பியவர்களின் முகத்திரை இரண்டு நாட்களில் கிழிந்ததை நாட்டு மக்கள் அறிவர். சமையல் எரிவாயு சிலிண்டர், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடின்றி கிடைத்து வருகிறது. பதுக்கலை தடுக்கவே கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.


கடந்த 12 ஆண்டுகால மோடி ஆட்சியில் மின் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துள்ளது. அதனால், எந்த நெருக்கடியையும் இந்தியா சமாளிக்கும். எனவே, தேர்தல் நேரத்தில் மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சூழ்ச்சி அரசியல் மக்களிடம் எடுபடாது என வானதி சீனிவாசன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...