பாகிஸ்தான் தீவிரவாதிகளை அழிக்க தயங்க மாட்டோம்: அமெரிக்கா கடும் எச்சரிக்கை

தேவைப்பட்டால் பாகிஸ்தான் மண்ணிலிருந்து செயல்படும் தீவிரவாத குழுக்களை தனியாக செயல்பட்டு அழிக்கவும் தயங்க மாட்டோம் என அமெரிக்கா கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக, தீவிரவாதத்துக்கு நிதியுதவி செய்வதைத் தடுக்கும் துறைக்கான செயலாளர் (பொறுப்பு) ஆடம் சுபின் கூறியதாவது:

பாகிஸ்தானின் சக்தி வாய்ந்த உளவு அமைப்பான ஐஎஸ்ஐ, அந்நாட்டிலிருந்து செயல்படும் அனைத்து தீவிரவாத அமைப்புகள் மீதும் நடவடிக்கை எடுக்க மறுத்து வருகிறது. குறிப்பாக சில அமைப்புகளை ஊக்குவித்து வருகிறது.

இந்த நிலைப்பாட்டை கைவிட்டுவிட்டு அனைத்துத் தீவிரவாத அமைப்புகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அதற்கான உதவிகளை செய்யவும் தயாராக உள்ளோம்.

தீவிரவாதிகளுக்கு எதிராக போரிடவும் தீவிரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி செல்வதைத் தடுக்கவும் பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். எனினும், தேவைப்பட்டால், தனியாகவே செயல்பட்டு அங்குள்ள தீவிரவாதக் குழுக்களை அழிக்கவும் தயங்க மாட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஹக்கானி அமைப்பு, ஆப்கானிஸ்தானில் தாக்குதலை நடத்தி வருகிறது. ஆனால், இந்த அமைப்பின் மீது நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் தயங்கி வரும் நிலையில் அமெரிக்கா இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Newsletter

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...

பொள்ளாச்சியில் அதிமுக தேர்தல் பரப்புரை: Jayaraman வாக்குச் சேகரிப்பு

பொள்ளாச்சி அண்ணா நகர் மற்றும் விஜயபுரம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் Jayaraman தலைமையில் அதிமுக கட்சியினர் தீவிர வாக்குச...

கோவை மருதமலை முருகன் கோவிலில் NDA வெற்றிக்காக சிறப்பு பூஜை

கோவை மருதமலை முருகன் கோவிலில் வரவிருக்கும் தேர்தலில் National Democratic Alliance அமோக வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நட...