மாணவர்கள் சாதனை புரிந்து தொழில் முனைவராக திகழ வேண்டும்- துணை வேந்தர் மணியன்

சர்தார் வல்லபாய் பட்டேல் பன்னாட்டு ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரியில் 8வது பட்டமளிப்பு விழா அக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் 61 மாணவர்களுக்கு பட்டங்களும், முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் மணியன் கலந்து கொண்டார். 



அவர் பேசுகையில்:- இந்திய ஜவுளித்துறையில் உள்ள வாய்ப்புகள் மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அத்துறையின் பங்களிப்பு முக்கியமானதாகும். மாணவர்கள் இந்நாள் அவர்களது பெருமிதமிக்க நாளாகும். இதற்காக பாடுபட்ட பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களை மாணவர்கள் நன்றி தெரிவித்து பாராட்ட வேண்டும். மாணவர்களின் பங்கு மூலம் உலக அரங்கில் பொருளாதாரம் உயர்ந்து நிற்கவும், நாடு முன்னேறவும் பாடுபட வேண்டும். தற்போதைய ஜவுளித் துறையில் பங்களிப்பு 14 சதவீதம் உற்பத்தி அளவில் உள்ளது. நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் அது முக்கிய பங்கு அளிக்கிறது. இத்துறை 3.5 கோடி மக்களுக்கு நேரடி வேலை வாய்ப்பு உள்ளது. உலக அளவில் சாதனை புரிய பல மாணவர்களை இக்கல்லூரி  உருவாக்குகிறது. அத்துடன் நம்மிடம் உள்ள தொழில்நுட்பத்தின் உதவியின் மூலம் பல சாதனைகளை புரிந்து தொழில் முனைவராக திகழ வேண்டும். மாணவர்களிடத்தில் உள்ள திறமையை ஊக்குவித்து அவர்களை நல்ல குடிமக்களாக திகழ வைக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இவ்விழாவில், தென் இந்தியாவில் ஜவுளி ஆராய்ச்சி கழக இயக்குநர் பிரகாஷ் வாசுதேவன், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா எம். சண்முகம், திருப்பூர் பாயிண்ட் நிட் ஏற்றுமதி நிர்வாக இயக்குநர் பாயிண்ட் மணி, கல்லூரி இயக்குநர் ரமேஷ்குமார், டீன் பெருமாள்சாமி, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...

பொள்ளாச்சியில் அதிமுக தேர்தல் பரப்புரை: Jayaraman வாக்குச் சேகரிப்பு

பொள்ளாச்சி அண்ணா நகர் மற்றும் விஜயபுரம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் Jayaraman தலைமையில் அதிமுக கட்சியினர் தீவிர வாக்குச...

கோவை மருதமலை முருகன் கோவிலில் NDA வெற்றிக்காக சிறப்பு பூஜை

கோவை மருதமலை முருகன் கோவிலில் வரவிருக்கும் தேர்தலில் National Democratic Alliance அமோக வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நட...