கல்லூரி அருகே கஞ்சா விற்றவர்கள் கைது

கோவை, ஈச்சனாரி மேம்பாலம் அருகில் கஞ்சா விற்கப்படுவதாக போத்தனூர் காவல் நிலையத்திற்கு செவ்வாயன்று தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில், காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, அப்பகுதியில் உள்ள கல்லூரியின் அருகில் சந்தேகத்திற்குறிய வகையில் நின்றுகொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், விற்பணைக்காக அவர் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் அந்த வாலிபர் மதுக்கரைப் பகுதியைச் சேர்ந்த அத்துல்லா என்பவரது மகன் அபுதாகிர் (30) என்பது  தெரியவந்தது. அவரிடம் இருந்து கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்யப்பட இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த காவல் துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனிடையே, கோவை சிட்கோவை அடுத்த பிள்ளையார்புர பேருந்து நிலையம் அருகில் வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பதாக போத்தனூர் காவல் துறையினருக்கு தகவல் வந்ததையடுத்து, அப்பகுதிக்கு விரைந்த காவல் துறையினர் அங்கு இருந்த பிள்ளையார் புரத்தைச் சேர்ந்த சேக் பரிதி என்ற வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர் கஞ்சா வைத்திருந்ததைத் தொடர்ந்து அவரைக் கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.

கோவை, போத்தனூர் பகுதியில் நேற்று ஒரே நாளில் 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...

பொள்ளாச்சியில் அதிமுக தேர்தல் பரப்புரை: Jayaraman வாக்குச் சேகரிப்பு

பொள்ளாச்சி அண்ணா நகர் மற்றும் விஜயபுரம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் Jayaraman தலைமையில் அதிமுக கட்சியினர் தீவிர வாக்குச...

கோவை மருதமலை முருகன் கோவிலில் NDA வெற்றிக்காக சிறப்பு பூஜை

கோவை மருதமலை முருகன் கோவிலில் வரவிருக்கும் தேர்தலில் National Democratic Alliance அமோக வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நட...