பழங்குடி மக்களின் நிலத்தை மீட்க கோரி ஆர்ப்பாட்டம்

பழங்குடி மக்களுக்களின் நிலத்தை அபகரித்த அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என ஆலந்துரை அடுத்த இக்கரை போலுவாம்பட்டியைச் சேர்ந்த கிராமத்து மக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.




கோவை, ஆலந்துரை அடுத்த இக்கரை போலுவாம்பட்டி கிராமத்தில் அரசுக்கு சொந்தமாக 43 ஏக்கர் நிலம் உள்ளது. இது பழங்குடி மக்களுக்காக ஒதுக்கப்பட்டது என்றும், நிலத்தை ஈஷா யோகாவினர் அபகரித்ததாகவும் புகார் எழுந்துள்ளது. இதற்கு நடவடிக்கை எடுக்க கோரி அக்கிராமத்தை சேர்ந்த100க்கும் மேற்பட்டோர் , கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 



இது குறித்து வழக்கறிஞர் பன்னீர் செல்வம் செய்துயாளர்களிடம் பேசுகையில் :- 
அரசுக்கு சொந்தமான 43 ஏக்கர் நிலம் பழங்குடி மக்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. இதை ஈஷா யோகா அமைப்பை சேர்ந்தவர்கள் அபகரிப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, எழுத்து பூர்வமாக நாங்கள் இனி அந்த நிலத்தை உபயோகிக்க மாட்டோம் என்று அந்த அமைப்பினர் எழுதி கொடுத்தனர். ஆனல் தற்போது, அங்கு கட்டிடங்களை அனுமதியின்றி கட்டி வருகின்றனர். பழங்குடி மக்களுக்கான அரசு ஒதுக்கப்பட்ட நிலத்தை அபகரித்து தனியாருக்கு கொடுத்த அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஒரு குடும்பத்துக்கு 2 செண்ட் இடம் என்று பிரித்து கொடுக்க வேண்டும் என அவர் கூறினார்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...