தேசிய அளவில் வெண்கலப் பதக்கம் வென்ற கோவை மாணவன்

கோவை: பீளமேடு பகுதியில் உள்ள ஸ்ரீ கோபால் நாயுடு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த தேசிய படை மாணவன் ஆஷிக் டெல்லியில் நடைபெற்ற .22 துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று இந்திய அளவில் மூன்றாம் இடம் பிடித்தான். தேசிய படை மாணவர்களுக்காக 6வது தமிழ்நாடு மெடிக்கல் கம்பெனியில் சார்பாக, துப்பாக்கி சுடுதல் பயிற்சி போட்டி நடைபெற்றது.

இதில் கோவையில் 5 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன்பின் சேலம் ஏற்காட்டில் நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஸ்ரீ கோபால் நாயுடு மேல்நிலைப்பள்ளியில் தேசிய படை மாணவன் ஆஷிக் தேர்வு பெற்றான். பின்னர், கந்தசாமி கவுடர் கல்லூரியில் நடைபெற்ற தேர்வு முகாமில் .22 துப்பாக்கி சுடுதல் பிரிவில் குரூப்பிங் தேர்வில் முதலிடம்  பிடித்தார்.



தொடர்ச்சியாக, சேலம், நாகர்கோயில், தூத்துக்குடி, மற்றும் பாளையங்கோட்டை ஆகிய பகுதிகளை துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பாக தேர்ச்சி பெற்று மதுரையில் நடைபெற்ற  கலந்து கொண்டு தமிழ்நாடு, பாண்டிச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் சார்பாக தேசியபடை மாணவர்களுக்கு அணித் தலைவராக நியமிக்கப்பட்டார்.

பின்பு, டெல்லியில் நடைபெற்ற இந்திய அளவிலான .22 துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்றது. இதில் வெண்கலப் பதக்கம் வென்று இந்திய அளவில் மூன்றாம் இடம் பிடித்தார். இம்மாணவனை பள்ளியின் தாளாளர்  ஜி.கே விஜயகுமார், பள்ளி நிர்வாக அலுவலர் பிரேமா, பள்ளி தலைமையாசிரியர் மனோரமா மற்றும் தேசிய மாணவர்படை ஆசிரியர் குமரன் ஆகியோர் பாராட்டினார். 

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...