கண்ணை கவரும் பூம்புகார் கொலு பொம்மைகள் கண்காட்சி

நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் சிறப்பு விற்பனையை பூம்புகார் விற்பனை நிலையம் துவங்கி உள்ளது.
இக்கண்காட்சியினை கோவை இந்திய தொழில் வர்த்தக சபை தலைவர் வனிதா மோகன் துவங்கி வைத்தார்.



தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கைதிறத்தொழில்களில் வளர்ச்சிக்கழகம் சார்பில் 44 ம் ஆண்டுகாலமாக இந்த விற்பனை மையம் செயல்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல், விநாயக சதுர்த்தி, விஜய தசமி, கிருஷ்ண ஜெயந்தி, கிறிஸ்துமஸ் போன்ற பல்வேறு பண்டிகை காலங்களில் கண்காட்சி மற்றும் விற்பனை நடத்தி வருகிறது.



அடுத்த மாதம் அக்டோபர் 2 தேதி துவங்க உள்ள நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு கொலு பொம்மைகள் என்ற பெயரில் கண்காட்சி மற்றும் விற்பனையை இந்நிறுவனம் துவங்கி உள்ளது. இக்கண்காட்சி (13.10.2016) வரை தினசரி கலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை நடைபெறுகிறது.



இக்கண்காட்சியில்,  மரபாச்சி பொம்மைகள், அஷ்டலஷ்மி, தசாவதாரம், ராமர் செட், கல்யாண செட், கடோத்கஜன் செட், பக்த பிரகலாத பட்டாபிஷேக செட், கிருஷ்ண லீலை செட், கோபியர் செட், உரியடி, உலகந்த பெருமாள், ஆழ்வார் செட்,ஆறுபடை வீடு, தக்ஷிணா மூர்த்தி, காமாக்ஷி பூஜை, கிணறு செட், சிங்கராஜா, ஒளவையர், பொங்கல் குதிரை செட், குருவாயூரப்பன், கச்சேரி செட், கீதோபதேசம், கொலு படிகள் மற்றும் பல்வேறு கொலு அமைக்க தேவையான பொருட்கள் இன்னும் ஏராளமானவை விற்பனைக்கு உள்ளன.
இக்கண்காட்சியில், சிறப்பு அம்சமாக ராமாயண வரலாற்று கதையை விளக்கும் வகையில் கொலு பொம்மைகள் மிக சிறப்பான முறையில் பார்வைக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன. 



இக்கண்காட்சியில் விற்பனை செய்யப்படும் அனைத்து கொலு பொம்மைகளுக்கு 10 சதவிகிதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது. இக்கண்காட்சி மூலம் ரூ.50 லட்சம் வரை விற்பனை எதிர்பார்க்கப்படுகிறது என மேலாளர் நரேந்திரபோஸ் தெரிவித்தார்.

Newsletter

மூலப்பொருள் விலை உயர்வால் 'ஜாப் ஒர்க்' நிறுவனங்கள் இயந்திர கட்டணம் உயர்த்த 'டாக்ட்', 'காட்மா' தொழில் அமைப்பினர் முடிவு

கோவையில் மூலப்பொருட்கள் விலை உயர்வால் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், Job Work நிறுவனங்கள் CNC,...

வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஆசையில் சிக்கும் இளைஞர்கள்: கோவை போலீசார் எச்சரிக்கை

கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கம்போடியாவில் சைபர் மோசடி கும்பலிடம் சிக்கி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, தென்கிழக்கு ஆச...

கிணத்துக்கடவு தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் வேட்பு மனு தாக்கல்

கிணத்துக்கடவு தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னாள் எம்.எல்.ஏ எட்டிமடை சண்முக...

கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் PRG அருண்குமார் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் PRG அருண்குமார் இன...

ஆனைமலையில் வால்பாறை தொகுதிக்கான தேர்தல் வியூக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

ஆனைமலையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வால்பாறை சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மதச்சார்பற்ற முற்...

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...