கோவை: மகளிர் சுய உதவி குழு தலைவி பண்டிகை காலங்களில் ஜேப்படி கொள்ளையராக நகரங்களில் வலம் வந்து கொள்ளையடித்து வந்த நிலையில் நேற்று (திங்கட்கிழமை) தனிப்படை போலீசார் அவரை கையும், களவுமாக கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
கோவை: மகளிர் சுய உதவி குழு தலைவி பண்டிகை காலங்களில் ஜேப்படி கொள்ளையராக நகரங்களில் வலம் வந்து கொள்ளையடித்து வந்த நிலையில் நேற்று (திங்கட்கிழமை) தனிப்படை போலீசார் அவரை கையும், களவுமாக கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

காரமடை டீச்சர்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (38). கூலித்தொழிலாளி. இவரது மனைவி அனிதா தேவி(32). இவர் அப்பகுதியில் மகளிர் குழு தலைவியாக உள்ளார். அதோடு தீபாவளி பொங்கல் புத்தாண்டு காலங்களில் பெண்கள் கடைவீதிகளில் குவியும் போது அதை பயன்படுத்தி நகை, பணம் ஜேப்படி செய்தும் வந்துள்ளார்.
இவர் மீது சாய்பாபா காலனி, ஆர்.எஸ் புரம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை கோவை மாநகர போலீசார் கடந்த 5 ஆண்டுகளாக தேடி வந்தனர். ஆனால் சிக்கவில்லை. இந்த நிலையில் தீபாவளி கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக்பாக்கெட் அடிப்பதற்காக இவர் ஆர்.எஸ் புரம், பூ மார்க்கெட் பகுதியில் நடமாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து தீபாவளி திருட்டுகளை தடுக்க அமைக்கப்பட்ட சிறப்பு படையைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, ஏட்டுகள் உமா, கார்த்தி ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் நேற்று மாலை ஆர்.எஸ் புரம், பூ மார்க்கெட் பகுதியில் நோட்டமிட்டனர். அப்போது ராஜாமணி என்ற பெண்ணிடம் கைப்பையிலிருந்து ரூபாய் 10 ஆயிரம் பணம் திருடும் போது அனிதா தேவியை கையும் களவுமாக பிடித்தனர்.
பின்னர் அவரை ஆர்.எஸ் புரம் குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து ரூபாய் 10 ஆயிரம் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
அனிதா தேவி போலீசில் அளித்துள்ள வாக்குமூலம் பின்வருமாறு:-
நான் வழக்கமான நாட்களில் மகளிர் குழு தலைவியாக இருப்பேன். பண்டிகை காலங்களில் நகை-பணம் ஜேப்படி செய்யும் நடவடிக்கையில் இறங்கி விடுவேன். பணம் சிக்கினால் நானே வைத்துக்கொள்வேன். நகை சிக்கினால் எனது கணவரிடம் கொடுத்து விடுவேன்.
அவர் அடகு கடையில் நகை விற்பனை செய்து பணமாக மாற்றி என்னிடம் கொடுத்து விடுவார். கடந்த 5 ஆண்டுகளாக திருட்டில் ஈடுபட்டு வருகிறேன். என் மீது மகளிர் குழுவினருக்கும், போலீசாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதால் காரமடையில் ஆடம்பரமாக வீடு எடுத்து தங்கி உள்ளேன்.
கூட்ட நெரிசலில் சிக்கித் தவிக்கும் பொதுமக்களின் கவனத்தை திசைதிருப்பி, அவர்களிடமிருந்து நகை பணத்தை எளிதாக திருடி விடுவேன். குறிப்பாக கைக்குழந்தையுடன் ஷாப்பிங் வரும் பெண்களை எளிதாக மடக்கிவிடலாம். எனது நடவடிக்கையில் சந்தேகம் வராத அளவுக்கு மிகவும் மாடனாக உடை அணிந்து கொள்வேன்.
என்று அனிதா தேவி தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

காரமடை டீச்சர்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (38). கூலித்தொழிலாளி. இவரது மனைவி அனிதா தேவி(32). இவர் அப்பகுதியில் மகளிர் குழு தலைவியாக உள்ளார். அதோடு தீபாவளி பொங்கல் புத்தாண்டு காலங்களில் பெண்கள் கடைவீதிகளில் குவியும் போது அதை பயன்படுத்தி நகை, பணம் ஜேப்படி செய்தும் வந்துள்ளார்.
இவர் மீது சாய்பாபா காலனி, ஆர்.எஸ் புரம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை கோவை மாநகர போலீசார் கடந்த 5 ஆண்டுகளாக தேடி வந்தனர். ஆனால் சிக்கவில்லை. இந்த நிலையில் தீபாவளி கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக்பாக்கெட் அடிப்பதற்காக இவர் ஆர்.எஸ் புரம், பூ மார்க்கெட் பகுதியில் நடமாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து தீபாவளி திருட்டுகளை தடுக்க அமைக்கப்பட்ட சிறப்பு படையைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, ஏட்டுகள் உமா, கார்த்தி ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் நேற்று மாலை ஆர்.எஸ் புரம், பூ மார்க்கெட் பகுதியில் நோட்டமிட்டனர். அப்போது ராஜாமணி என்ற பெண்ணிடம் கைப்பையிலிருந்து ரூபாய் 10 ஆயிரம் பணம் திருடும் போது அனிதா தேவியை கையும் களவுமாக பிடித்தனர்.
பின்னர் அவரை ஆர்.எஸ் புரம் குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து ரூபாய் 10 ஆயிரம் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
அனிதா தேவி போலீசில் அளித்துள்ள வாக்குமூலம் பின்வருமாறு:-
நான் வழக்கமான நாட்களில் மகளிர் குழு தலைவியாக இருப்பேன். பண்டிகை காலங்களில் நகை-பணம் ஜேப்படி செய்யும் நடவடிக்கையில் இறங்கி விடுவேன். பணம் சிக்கினால் நானே வைத்துக்கொள்வேன். நகை சிக்கினால் எனது கணவரிடம் கொடுத்து விடுவேன்.
அவர் அடகு கடையில் நகை விற்பனை செய்து பணமாக மாற்றி என்னிடம் கொடுத்து விடுவார். கடந்த 5 ஆண்டுகளாக திருட்டில் ஈடுபட்டு வருகிறேன். என் மீது மகளிர் குழுவினருக்கும், போலீசாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதால் காரமடையில் ஆடம்பரமாக வீடு எடுத்து தங்கி உள்ளேன்.
கூட்ட நெரிசலில் சிக்கித் தவிக்கும் பொதுமக்களின் கவனத்தை திசைதிருப்பி, அவர்களிடமிருந்து நகை பணத்தை எளிதாக திருடி விடுவேன். குறிப்பாக கைக்குழந்தையுடன் ஷாப்பிங் வரும் பெண்களை எளிதாக மடக்கிவிடலாம். எனது நடவடிக்கையில் சந்தேகம் வராத அளவுக்கு மிகவும் மாடனாக உடை அணிந்து கொள்வேன்.
என்று அனிதா தேவி தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.