டிசம்பரில் கட்சி குறித்து அறிவிப்பு - ரஜினியின் அண்ணன் சத்தியநாராயண ராவ்

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சி குறித்து டிசம்பர் மாதம் அறிவிப்பார் என அவரது அண்ணன் சத்தியநாராயண ராவ் தெரிவித்துள்ளார்

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சி குறித்து டிசம்பர் மாதம் அறிவிப்பார் என அவரது அண்ணன் சத்தியநாராயண ராவ் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் பல ஆண்டுகளாக அரசியலுக்கு வருவதாக சொல்லி வந்த நிலையில் சமீபத்தில் தனது அரசியல் வரவை உறுதிப்படுத்தினார். அதையடுத்து அவரது ரசிகர் மன்றங்கள் ரஜினி மக்கள் மன்றங்களாக மாற்றப்பட்டு அரசியல் பணிகளில் இறங்கின

தொடர்ந்து படப்பிடிப்பில் இருந்து வந்த ரஜினி பேட்ட படப்பிடிப்புக்கு பிறகு நேற்று சென்னை திரும்பினார். சமீபத்திய அவரது அரசியல் நடவடிக்கைகள் மூலம், டிசம்பர் 12-ம் தேதி தனது கட்சி குறித்து அறிவிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.

நேற்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, டிசம்பர் 12-ம் தேதி கட்சி அறிவிப்பு இல்லை என தெரிவித்தார். இதனால் அவரது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில், இன்று அவரது அண்ணன் சத்தியநாராயண ராவ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ரஜினி அரசியல் கட்சி துவங்குவதற்கு பின்னால் பாஜக இல்லை என தெரிவித்துள்ளார். மேலும், ரஜினி தனது கட்சி குறித்த அறிவிப்பை டிசம்பரில் அறிவிப்பார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது அண்ணனின் இந்த மாறுபட்ட கருத்துக்களால் ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். 

Newsletter

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மூன்று மத குருமார்களுடன் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்த அமைச்சர் சம்பத்குமார்

கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை அமைச்சர் சம்பத்குமார் இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மத குருமார்களின் முன்னிலையில...